India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வெப்ப அலை வீசி வருவதால் (மஞ்சள்)அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் அதிக நீர்ச்சத்துள்ள பழவகைகள் உண்ண வேண்டும் இன்று நாமக்கல் மாவட்டம் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நம்மாழ்வார் திருவிழா வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில், பாரம்பரிய உணவுப் பொருள்கள் கொண்ட கண்காட்சியும் இடம்பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன் , சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி , நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் இரவில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் கடலூரில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சிதம்பரத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
தி.மலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 100. 4 டிகிரி பாரன்ஹீட், 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
பழனி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் காய்கள், பழங்கள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் எலுமிச்சை பழம் வரத்து குறைவாக உள்ளது. மக்கள் அதிகம் எலுமிச்சை பழம் வாங்குவதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையில் ஒரு பழம் ரூ. 8 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திரா பிரியதர்ஷினி, நித்யா, சுபாஷினி ஆகிய 3 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த குரூப்-1 தேர்வில் நித்யா உதவி ஆட்சியராகவும், இந்திரா பிரியதர்ஷினி வணிக வரித்துறையில் உதவி ஆணையராகவும், சுபாஷினி கூட்டுறவுத்துறையில் துணைப் பதிவாளராகவும் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திருவள்ளூர், பெருமாள்பட்டு கிராமத்தில் தனியார் பள்ளியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் கலெக்டர் பிரபுசங்கர் இன்று (25/04/2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைவர் திருமதி கே.எம்.சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு. பூதேவி மற்றும் வட்டார சுகாதார அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கோடை காலத்தை அடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் காய்ச்சல், சளி இருமல், வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, தோலில் ஏற்படும் கொப்பளங்கள், அம்மை , மஞ்சள் காமாலை, மனிதர்கள் பறவைகளுக்கு ஏற்படும் அசாதாரணமாக உயிரிழப்புகள் போன்ற தகவல்களை கீழ்காணும் https://ihip.mohfw.gov.in/cbs/-1 என்ற இணையதளத்தில் பதிவேற்றலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.