India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல், அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை, அசாதாரண உயிரிழப்புகள் (மனிதர்கள்/ பறவைகள்) போன்ற தகவல்களை தாங்களாகவே முன்வந்து https://lhip.mahfw.gov.in/cbs/-1/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அரசுக்கு தாங்களாகவே முன்வந்து தெரிவிப்பதின் மூலம் பொது சுகாதாரத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க இயலும் என குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 43 மதுபாட்டில்கள், 180 லிட்டர் கள்ள சாராயம், மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
பழனி சாலையில் உள்ள இடையபட்டியில் பகவதியம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா இன்று 25.04.2024- துவங்கியது. இன்று நடந்த கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு முகூர்த்த கால் ஊன்றி கோவில் திருவிழாவை துவங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த திருவிழாவில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பது முக்கியமானதாகும்.
தஞ்சை அருகே உள்ள வெள்ளாம்பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (43). இவர் மருவூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். மாமியாரின் மருத்துவ செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் (விஷம்) சாப்பிட்டார். தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று (ஏப்,24) இறந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் மீனா வ/17. இவர் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மீனா வீட்டின் உள் அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவியின் தற்கொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவை புரிந்த 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார். ரூ.1 லட்சம், பாராட்டு பத்திரம், பதக்கம் கொண்ட விருதினை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் சென்று மே.15க்குள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டத்தில் தற்போது கடுமையாக வெப்பம் மற்றும் வெப்ப அலை இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். மதியம் 11 மணி முதல் மூன்று முப்பது மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது.
தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டதாக மொத்தம் 379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 317 வழக்குகள் உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 62 வழக்குகளில் ரூ.1,44,82,819 பணம் உரிமை கோரப்படாமல் கருவூலத்தில் உள்ளது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (25.04.2024) மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
கேரளாவில் நாளை (ஏப்.26) மக்களவைத் தேர்தல் நடைப் பெறுகிறது. இதையொட்டி, தமிழக எல்லையான, நம்பியார், குன்னூர், தாளூர், அய்யன் கொல்லி, எருமாடு ஆகிய இடங்களில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. நாளை மறுநாள் (ஏப். 27) கடைகள் திறக்கப்படும். இதனால் மது பிரியர்கள் கோரஞ்சால், குந்தலாடி ஆகிய இடங்களில் உள்ள கடைகளை நாடி செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.