India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற தேர்தல் வாக்கு என்னும் மையத்தில் வாக்கு என்னும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் அவர்கள், திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்ட பாராளுமன்ற தொகுதி 11 மணி நிலவரம், தென்காசி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம், தி.மு.க-57011, அ.தி.மு.க -32723, பா.ஜ.க -26934
நாம் தமிழர் கட்சி -18856 தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகின்றது.
திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இதில் ஒவ்வொரு சுற்று வாக்குகள் முடிவுகளையும் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்து வருகின்றார்.
தென்காசியில் நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கையானது தனியார் கல்லூரியில் தீவிரமாக எழுதப்பட்டு வருகிறது .இதில் மூன்றாவது சுற்றில் திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீகுமார் 54,004வாக்குகள், அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணசாமி 30,276 வாக்குகள் ,பாஜக 25571 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 17,736 வாக்குகள் பெற்றுள்ளன. இதில் 23 ஆயிரத்து 724 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 3ஆவது சுற்றில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக- 26,398 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக-15,958, மூன்றாவது இடத்தில் பாமக-18,279 வாக்குகள், நாம் தமிழர் கட்சி-.5,187 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் திமுக வேட்பாளர் தொடர்ந்து 28,410 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்று வருகின்றது. இதில் இதுவரை வெளியான முடிவில் இந்திய கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது. இந்த நிலையில் பிரதான கட்சியான அதிமுக கட்சி 8137 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22446 வாக்குகள், அதிமுக 11062 வாக்குகள், பாரதிய ஜனதா 10182 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 4726 வாக்குகள் பெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டின தொகுதியில் தற்போது மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், திமுக + இ.கம்யூ கூட்டணி 50, 539 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து அதிமுக கூட்டணி 27, 735, நாம் தமிழர் 13, 834, பாஜக 9, 533 வாக்குகளும் பெற்றுள்ளன.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 6ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் -1,51,953, அதிமுக குமரகுரு – 1,34,644, பாமக தேவதாஸ் – 19,531, நாதக ஜெகதீசன் – 19,035. இதில் திமுக வேட்பாளர் – 17,309 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். 11 மணி நிலவரப்படி ஓபிஎஸ் 17295 வாக்குகள் பெற்று திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை விட 14658 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.