Tamilnadu

News April 26, 2024

நெல்லை மாணவன் சாதனை

image

வண்ணாரப்பேட்டை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் சென்டரில் பயிலும் மாணவன் ஸ்ரீராம் இந்த வருடம் நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 65-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளான். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவனை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் முதன்மை கல்வி மற்றும் வணிக தலைவர் தீரஜ் மிஸ்ரா நேற்று (ஏப்.25)பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

News April 26, 2024

ஆன்லைன் கேமிங் செயலி மோசடி: பரபரப்பு புகார்

image

விளையாட்டு தொடர்பான ஆஃப்களில் பிரபலமான DREAM -11 ஆஃப் பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. DREAM 11 ஆப்பில் ஒரே பெயர்களுடைய ஏராளமான நபர்கள், போட்டிகளில் கலந்துகொள்வது போல சாப்ட்வேர் மூலமாக முறைகேடாக விளையாடி, பொது மக்களின் பணத்தை ஏமாற்றி வருவதாக, விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த கல்யாணகுமார், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

News April 26, 2024

இரு சக்கர வாகனம் பயன் படுத்துங்கள்..

image

நீலகிரி, மே 1ல் கோடை விழா தொடங்குவதை அடுத்து சுற்றுலா கூட்டம் கூடுதலாகும். இதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை சீராக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று (ஏப். 25) நடந்தது. இதில் கடை நடத்தும் வியாபாரிகள் 4 சக்கரங்களுக்கு பதிலாக 2 சக்கர வாகனத்தை பயன் படும் படி அறிவுறுத்தப் பட்டது.

News April 26, 2024

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

image

கம்பம் தெற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜமீன்தார் சக போலீசாருடன் நேற்று ரோந்து சென்றபோத கம்பம் ஆங்கூர் பாளையம் ரோடு நகராட்சி குப்பை கிடங்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கம்பத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் விற்றுக்கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் அவரை சோதனையிட்டு அவரிடம் இருந்த 72 லாட்டரி சீட்டுகளையும்,லாட்டரி விற்ற பணம் ரூ. 900 யும் கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

News April 26, 2024

வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தில் முருகன்!

image

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்டப் பிளையார் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் கடைசி விழாவாக தெப்ப உத்ஸவம் நேற்று(ஏப்.25) நடைபெற்றது. இதில், கோயில் அருகிலுள்ள திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி – தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

News April 26, 2024

மாநில எல்லை சோதனைச் சாவடியில் ஆய்வு

image

கர்நாடக மாநிலத்தில் முதல் கட்டமாக இன்று ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் இரண்டாம் கட்டமாக மே 6 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம், பர்கூர் பகுதியில் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தட்டக்கரை வன அலுவலகம் முன்பு தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு குறித்து மாவட்ட எஸ்.பி. ஜவகர் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

News April 26, 2024

450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களான இன்று மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News April 26, 2024

செந்துறையில் கோடைகால நீர் மோர் பந்தல்

image

பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வன் MA, Ex. மலை செந்துறையில் நேற்று (25.04.2024) தண்ணீர் பந்தலை பொதுமக்களின் நலனுக்காக திறந்து வைத்து நீர்,மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவகளை வழங்கினார். உடன் செந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம் எஸ். ரமேஷ் மற்றும் ஒன்றிய சார்பு அணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

News April 26, 2024

பேருந்துகள் குறைப்பு பயணிகள் அவதி

image

விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 39 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை,பேருந்து பழுது காரணமாக 30 வழித்தடங்களில் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது மதுரை,தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு பேருந்து சேவை மேலும் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

News April 26, 2024

பிரம்மோற்சவ விழா நிறைவு நாள்

image

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் பத்தாம் நாளான நேற்று சுவாமி ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் தன்னுடைய மருமகன் வள்ளி தெய்வானை,சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியுடன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!