India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 2 சுற்றுகள் முடிவில்
இ.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுப்பராயன் 45946 வாக்குகள் பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக
அதிமுக 37076, பாஜக 15213, நாம் தமிழர் 6069 பெற்றுள்ளனர். இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 9,869 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் உட்பட ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2-ம் சுற்றில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 53245 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35429 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 24753 வாக்குகள் பெற்ற நிலையில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 17816 திமுக முன்னிலை வைக்கிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் ஆலோசனையின் பெயரில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மற்றும் காவலர்களுக்கு உணவு தயார் செய்யும் கூடத்தை தென்காசி உணவு பாதுகாப்பு உட்கோட்ட அலுவலர் நாக சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் போட்டியிட்ட நவாஸ் கனி இதுவரை நடைபெற்ற மூன்று சுற்றில் 12,322 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இதனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியின் 3 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க கூட்டணி 81815, அ.தி.மு.க கூட்டணி 18978, பா.ஜ.க கூட்டணி 57411வாக்குகள் பெற்றுள்ளன. 3 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின் படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 24404 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து மூன்று சுற்றுகள் திமுக முன்னிலையில் உள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் பணி அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் முன்னணி நிலவரத்தை திமுக தலைமையிலான இந்திய கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி எம்பி, ஊடக மையத்தில் செய்தியாளர் அறையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேரலை முடிவுகளை பார்த்து மகிழ்ந்தார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இன்று காலை 10.40 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் – 1,06,263 வாக்குகளும்,
தே.மு.தி.க வேட்பாளர் சிவக்கொழுந்து – 67,819 வாக்குகளும்,பா. ம. க வேட்பாளர் தங்கர் பச்சான் – 31,511 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன் 13,582 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது
பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மக்களை நம்பி ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்” என்றார். முதலில் இவர் பாஜக தான் வெற்றி பெறும் என பேசியிருந்தார். தற்போது வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் பாஜக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அந்தர் பல்டி அடித்துள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியின் இரண்டாம் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் சுற்றில் திமுக வேட்பாளர் அருண் நேரு 29340 வாக்குகள் பெற்றுள்ளார்.அவர் சுமார் 19,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் நான்காம் சுற்று எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 4086 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பாபு 3044 வாக்குகளும், பாமக வேட்பாளர் ஸ்டாலின் 1306 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் 1095 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.