Tamilnadu

News April 26, 2024

அரவக்குறிச்சி: நீதிபதி முன்பு தற்கொலை முயற்சி!

image

அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவருக்கு விடுப்பு மற்றும் 2 மாதம் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நடராஜன் நேற்று(ஏப்.25) நீதிபதி சந்தோஷம் பணியில் இருந்தபோது விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News April 26, 2024

ஸ்ரீ ராமர் சீதைக்கு திருக்கல்யாண வைபவம்

image

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கீளப்பூடி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீராமர் கோவிலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று மாலை காப்புக்கட்டுதல் வைபோவம் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீராமபெருமாளுக்கும் அன்னை சீதைக்கும் ராஜ அலங்காரத்துடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது

News April 26, 2024

நாமக்கல் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

நாமக்கல் நகராட்சியில் 19 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1 நபருக்கு 135 லி. குடிநீர் வழங்கப்படும் நிலையில், கோடை வெப்பம் காரணமாக காவிரி ஆற்றில் குடிநீர் குறைந்து வருகிறது. குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் கொண்டு உறிஞ்சி எடுத்தால் அபராதம் விதிப்பதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் நேற்று(ஏப்.25) எச்சரித்துள்ளார்.

News April 26, 2024

நிலைக்கு வந்த மாரியம்மன் கோவில் தேர்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று மாலை 3:45 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் நேற்று இரவு 9 :30 மணி அளவில் கோவில் பகுதியை அடைந்தது .இந்த வருடம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் 5 மணி நேரம் கழித்து தேர் நிலையை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

News April 26, 2024

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான மாணவி குழந்தைகள் நல காப்பகத்தில் தகவல் தெரிவித்ததன் பேரில், ரமேஷ் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரமேஷ் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News April 26, 2024

வேலூர்: சைக்கிள் மீது பைக் மோதி ஒருவர் பலி

image

அணைக்கட்டை சேர்ந்தவர் சந்திரன் (55). இவர் நேற்றிரவு (ஏப்ரல் 25) வல்லண்டராமம் கிராமத்தில் இருந்து அணைக்கட்டு நோக்கி சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த பைக் இவரது சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரனை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 26, 2024

ரூ.1.50 மதிப்புள்ள புகையிலை பறிமுதல்

image

சங்கரன்கோவிலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிஎஸ்பி சுதீர் உத்தரவின் பேரில் நேற்று இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோமதிபுரம் தெருவில் உள்ள கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 135 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

News April 26, 2024

புதுவையில் மதுக்கடைகள் இயங்க அனுமதி

image

புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இரவு 10 மணிவரை மட்டுமே இயக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டதால் மதுக்கடைகள் அனைத்தும் வழக்கம் போல் இரவு 11 மணி வரை செயல்பட புதுச்சேரி மாநில கலால் துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.

News April 26, 2024

இளைஞரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு

image

திருச்சுழி அருகே தொட்டியாங்குளத்தைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு(23). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக பிரதீப் தூண்டுதலின் பேரில் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தினேஷ் பாபுவை தாக்கியதாக கூறப்படுகிறது. திருச்சுழி போலீசார் நேற்று 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 26, 2024

கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

image

மண்ணச்சநல்லூர் அருகே கீழக்கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (32). இவர் சொந்தமாக முறுக்கு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் பலரிடம் கடன் வாங்கி, பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!