India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சோ்ந்தவா் உமா மகேஸ்வரி (45). இவரது வீட்டிலிருந்து நேற்று புகை வெளிவந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தேனிக்கு சென்ற உமா மகேஸ்வரிக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சர்ச்சையான போஸ்டர் அச்சடித்து ஒட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் பாஜக முக்கிய நிர்வாகிகளான வெற்றிவேல், சசிகுமார், சின்னசாமி, சின்ன இருளப்பன் ஆகியோர்கள் தேர்தல் பணிக்குழு மூலம் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 2019ல் கோவை மகளிர் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணை முடிவுற்று வரும் ஜூனில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை அழகர் மலையிலிருந்து கடந்த 21 ஆம் தேதி புறப்பாடான கள்ளழகர் 23 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளினார். இந்நிலையில் நேற்று இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை பூ பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் அழகர் மலைக்கு புறப்பட்டார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க அழகரை மனமுருக வழியனுப்பி வைத்தனர்.
ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்தவா் எம்.ஜெயக்குமாா். இவா் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வாடகை வீட்டில் தங்கி மழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், கறம்பக்குடியில் உள்ள வாடகை வீட்டில் இருந்தபோது நேற்று திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்த முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், மதுரை விமான நிலையத்திற்கு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருள் கடத்தலை தடுப்பதற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 8300014567, 9514144100 என்ற அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதைப் பொருள் கடத்தலை தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று(ஏப்.26) முதல் 3 நாளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 280 பேருந்துகளும், நாளை(ஏப்.27) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், ஏப்.28ம் தேதி மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப வசதியாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் கோரிக்கைகு ஏற்ப மயிலாடுதுறை, திருச்சியிலிருந்து வரும் ரயில்கள் திருவாரூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை மே 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இயக்கப்படும் ரயில்கள், திருவாரூா் வரை நீட்டிக்கப்பட்டதற்கு, மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
காஞ்சிபுரத்திலிருந்து இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு, அரக்கோணம் நோக்கி இன்று(ஏப்.26) காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பரமேஸ்வர மங்கலம் அருகே வரும்போது நிலை தடுமாறிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த காரும் லாரியின் பின்பக்கம் மோதி விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் லேசான காயமடைந்தனர். தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.