India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தானசேகர் நேற்று கிருஷ்ணராஜபுரம் அருகே ரோந்து சென்றார். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இசக்கி பாலன் என்பவரை பிடிக்க முயன்றுள்ளார். அப்பொழுது அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார் . இதனை அடுத்து இசக்கி பாலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்
பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் நேற்று தனது பைக்கில் டொம்புச்சேரி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே குணசேகரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இருவரில் பிரபு என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குணசேகரன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
தாளவாடி அடுத்த கும்டாபுரம் வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண் யானை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து யானையின் உடல் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் தந்தங்கள் இல்லாதது தெரியவந்தது. இதனால் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டதா?அல்லது வேறு காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் முரளி(36). இவர் கூவத்தூர் செட்டி தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் இன்று சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியதில் முரளி நிலை தடுமாறி விழுந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கொக்கிரகுளத்தில் உள்ள நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் 2ம் கட்ட அறிவியல் பயிற்சி முகாம் வரும் மே மாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி நடக்கிறது. இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மாவட்ட அறிவியல் மையத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட அறிவியல் மைய அதிகாரிகள் இன்று (ஏப். 26) தெரிவித்தனர்.
அரியலூரில் உள்ள சிற்றூரான கரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய சரணாலயம் இதுவே. இங்கு திபெத், லடாக், ரஷ்யா, சைபேரியா போன்ற நாடுகளிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து அக்டோபர் முதல் மே வரை தங்கி செல்கின்றனர். 50க்கு மேற்பட்ட நீர்ப்பறவைகளும் 37 வகையான நிலப்பறவைகளும் வருகின்றன. பகலில் இரை தேடச் சென்று, மாலையில் சரணாலயத்திற்கு திரும்புவதால், மாலை நேரம் இங்கு செல்ல ஏற்றதாகும்.
பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த இருவரை தாக்கியதாக 2019ல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் இழப்பீட்டு தொகையை ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரிடமும் சமமாக அரசு அபராதமாக வசூலித்துக் கொள்ளலாம் எனவும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று (ஏப். 26) உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அண்ணா நகர் முதல் பாளைய ரோடு இணைப்பு வரை புதிதாக சாலை அமைக்கும் பணி தேர்தலுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
சேத்துப்பட்டு, பழம்பேட்டை வந்தவாசி சாலையில் உள்ள முகமாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணு. திமுக நிர்வாகியான இவர் நேற்று காலமானார். இந்நிலையில், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி இன்று நேரில் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.