India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகளிர் இலவச பேருந்துக்கள் பேருந்து நிறுத்தத்தில் நிற்கவில்லை என ஆங்காங்கே புகார் எழுந்தது. இந்நிலையில் எம்.டி.சி நிர்வாகம் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊர் நல கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. வர்த்தக சங்க தலைவர் நிஜாமுதீன் தலைமை வகித்தார். தங்கச்சிமடம் மக்களை புறக்கணிக்கும் மின் வாரியத்தை கண்டித்து மே 7ல் தேதி தங்கச்சிமடத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி ஏற்பாடு செய்தார்.
தென்காசி,ஐந்தருவி அருகே உள்ள சூழல் பூங்காவில் இன்று தமிழ்நாடு வனத்துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து நடத்திய கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாமில் கலந்து கொண்டு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் பரிசுகளையும், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.இதில் மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மணப்பாறையை அடுத்த கருத்த கோடாங்கிபட்டியை சேர்ந்த பழனிச்சாமி. இவருக்கு அனிதா, ஜோதிகா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் ஜோதிகா மணப்பாறை ஜெயம் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதிகா நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையறிந்த மணப்பாறை இன்று போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை அருகே கேணிக்கரை பகுதியில் ஸ்ரீராம் என்ற இளைஞர் கையில் அருவாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் விரைந்து சென்று ஸ்ரீராமை கைது செய்தனர். பின்னர் ஸ்ரீராம் மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் இன்று சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காரியாபட்டி அருகே சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேனேஜிங் டிரஸ்டி திருமதி சினேகா லதா பொன்னையா உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் மே முதல் வாரத்தில் வெப்ப அலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேசமயம் மே 5ம் தேதி முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதன்படி, ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற உள்மாவட்டங்களில் மே முதல் வார இறுதியில் இருந்து இரண்டாவது வாரம் வரை மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
மே 1 முதல் 4 வரை தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
மே 1 முதல் 4 வரை தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
கோவையில் நேற்று (ஏப்.25) 103 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
Sorry, no posts matched your criteria.