India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்றம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கரி ராமன் வட்டத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் இன்று தனது மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் நடைபெற உள்ளது. வரும் மே 1 முதல் மே 11 வரை ஓவியம், கலை, போஸ்டர் தயாரித்தல், இணைய வழி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற உள்ளன. எனவே பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற மாணவர்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 2ம் தேதி முதல் விழுப்புரம் – மயிலாடுதுறை ரயில் திருவாரூர் வரையும்.மே 3ம் தேதி முதல் மயிலாடுதுறை – விழுப்புரம் ரயில் திருவாரூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06877 விழுப்புரம் – திருவாரூர் ரயில், விழுப்புரத்தில் இருந்து மாலை 6.25க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 10.45க்கு திருவாரூர் சென்றடையும் என செய்தி வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறையில் முன்பகை காரணமாக கனகசபை என்பவரை ரமேஷ் மற்றும் அஜித்குமார் பீர் பாட்டிலால் கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த கனகசபை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பாக அவரது மனைவி பிரபாவதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரமேஷ் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு வஉசி விளையாட்டு மைதான வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நீச்சல் குளம் உள்ளது. நடப்பாண்டில் 3ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் மற்றும் மேலும் தகவலுக்கு 0424-2223157 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி அடுத்துள்ள ராஜதானி அருகே மொய் செய்யவில்லை எனக்கூறி தகராறு ஏற்பட்டுள்ளது. ராஜசேகரன் தனது வீட்டு முன்பு பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பாண்டியம்மாள் சன்னாசி உறவினர்கள் நடராஜன் தலைமலை வெள்ளைச்சாமி மற்றும் நான்கு பேர் சேர்ந்து ராஜசேகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பதிலுக்கு ராஜசேகரன் மற்றும் குடும்பத்தினரும் அவர்களை தாக்கியதால் போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
பழனியைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்தபடியே 30 நிமிடம் யோகாசனம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். தக்சதர்ஷன் , ஹர்னேஷ் , ஆதித்யா ஆகிய மூவரும் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து ஸ்கேட்டிங்கில் யோகா செய்ததற்காக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது. சாதனை மாணவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் பலரும் பாராட்டினர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்.6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகராத்தில், நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடியிடம், தாம்பம் போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.
வீயன்னூர் பிலாவிளையை சேர்ந்த செல்வராஜ் மனைவி ஸ்டெல்லா பாய் (44). இவர்கள் மகள் அபிதா, மருமகன் அஜின் (27) 14 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் இறந்த பின் புதுகாடுவெட்டி விளை ஜாண் கிறிஸ்டோபர்(39), ஸ்டெல்லாபாய்க்கு உதவியாக இருந்துள்ளார். முன் விரோதத்தில் நேற்று நள்ளிரவு ஜாண் கிறிஸ்டோபர் ஆசிட்டை ஸ்டெல்லா பாய், அஜின் மீது ஊற்றியதில் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை சித்திரை திருவிழாவிற்கு விளையாட்டு பொருள் விற்பனை செய்ய வந்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகம்மது சலீம்(25). இவர், அங்கு 17 வயது சிறுவன் சிகரெட் குடித்தபோது அதனை தருமாறு கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, 17-வயது சிறுவன், சலீமை மதுபாட்டிலால் குத்தியதில் சலீம் காயமடைந்தார். இதையடுத்து சிறுவனை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.