Tamilnadu

News April 27, 2024

ஆரணி அருகே இளைஞர் கைது

image

ஆரணி அருகே உள்ள எஸ் யூ வனம் கிராமத்தைச் சேர்ந்த தங்கபாலு சொத்து தகராறில் வயலில் நீர் பாய்ச்சியபோது தனது பெரியப்பா ஆறுமுகன் என்பவரை தாக்கி ஆறுமுகனின் பல்லை உடைத்துள்ளார். பல்லை உடைத்த தங்கபாலு மீது ஆரணி கிராமிய காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகாராணி வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

News April 26, 2024

பட்டப்பகலில் கொடூர கொலை

image

மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த அருள்முருகன் (29) மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்துசென்றபோது அங்கு வந்த மர்ம கும்பல் அருள்முருகனை  அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு கையை தனியாக துண்டித்தனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அருள் முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 26, 2024

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் மூலம் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள குழந்தைகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News April 26, 2024

ஆசிரியை மீது தாக்குதல் – கண்டனம்

image

தமிழர் உரிமை மீட்பு கள ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி இன்று (ஏப். 26) கூறியுள்ளதாவது, ஆசிரியை மீது சாதிய தாக்குதல் நடத்திய நாங்குநேரி சிங்கநேரி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை ஏஞ்சல் மற்றும் தலைமை ஆசிரியை சங்கரி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 26, 2024

காவல்துறை அதிகாரிகளுக்கான மாதாந்திர கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கு எஸ். பி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News April 26, 2024

மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

2024-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக வளர்ச்சிக்காக சேவையாற்றிய 15-வயது முதல் 35-வயது நிரம்பிய நபர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் மே 15ம் தேதி மாலை 4-மணிக்குள் விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 26, 2024

ரெட்டியார்சத்திரம் அருகே எருது விடும் திருவிழா

image

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள எல்லைப்பட்டி கோவில் திருவிழாவில் இன்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த எருது விடும் போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாடுகள், மற்றும் அதன் உரிமையாளர்கள் பங்கேற்றனர். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சியான இதை காண திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் காண வந்திருந்தனர்.

News April 26, 2024

கடும் வெயில்- பீர் விற்பனை அமோகம்

image

நீலகிரியில் உள்ள 6 தாலுகாவில் 73 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இவைகளில் தினசரி 90 ஆயிரம் முதல் 1 லட்சம் பல்வேறு மது வகைகள் விற்கப்படுகிறது. அதில் பீர் வகை 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பாட்டில் விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரம் பாட்டிலாக விற்பனை அதிகரித்து உள்ளது என டாஸ்மாக் அதிகாரி இன்று (ஏப்.26) கூறினார்.

News April 26, 2024

வெடிகுண்டு வீசிய வழக்கில் ஒருவர் சரண்

image

மேலூர் அருகே கீழவளவில் கடந்த ஏப்.21-ல் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு நடந்தது. இதில் நவீன்குமார் ஆட்டோ டிரைவர் கண்ணன் காயமடைந்தனர். இது தொடர்பாக கீழவளவு போலீசார் 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த வெள்ளையதேவன் (24) இன்று மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை மே 10-ம் தேதி வரை ரிமாண்டில் வைக்க நீதிபதி கோகுலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

News April 26, 2024

திருநெல்வேலி வேட்பாளர் வழக்கு மாற்றம்

image

சென்னை தாம்பரம் ரயில்வே நிலையத்தில் திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடமிருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (ஏப்.26) உத்தரவிட்டார்.

error: Content is protected !!