India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். அதில் தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து விளையாட்டு போட்டிகளை 29.04.2024 முதல் 13.05.2024 வரை நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. அதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு கலந்து கொள்ளலாம்.
தேனியில் 46,144 செம்மறியாடுகளும் 60,081 வெள்ளாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள 53 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைத்து, ஏப் 29 முதல் மார்ச் 28 வரை 30 நாட்களுக்கு தடுப்பூசிப் பணி இலவசமாக மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வாழப்பாடி அருகே தும்பல்வனச்சரகம் , பெலாப்பாடி காப்புக்காடு ஒட்டியுள்ள ஓடைப் பகுதியில் நாய்களால் புள்ளிமான் ஒன்று துரத்தி வரப்பட்டுள்ளது. இதனை அறுத்து கறியை பங்கிட்டுக்கொள்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று மான் கறி வைத்திருந்த பெரியசாமி, மாயவன் உட்பட 8 பேரை பிடித்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வேலூர் சிறுகாஞ்சி பகுதியில் போடப்பட்ட சிமெண்டு சாலையை அதேப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், மேலும் அங்கு கற்களை வைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று (ஏப்ரல் 26) மாலை வேலூர் ரவுண்டானா அண்ணாசாலையில் திடீரென அமர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டனர்.
சிவகிரி பேரூராட்சி வார சந்தை வளாகத்தில் புதிதாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடைகளில் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் தங்களின் வியாபாரத்திற்கு தகுந்தவாறு இடம் ஒதுக்கப்படவில்லை என வியாபாரிகள் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதியிடம் கோரிக்கை வைத்தார். இன்று அவர் சந்தை பகுதிக்கு சென்று பார்வையிட்டு வியாபாரிகளின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் மூலம் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள குழந்தைகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் குழுமூர் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று (26.04.2024) தீமிதி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவானது 18 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதளுடன் தொடங்கிய திருவிழா ஒவ்வொரு நாளும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு வெப்ப நிலை அதிகளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் அப்பகுதி இளைஞர்கள் போடப்பட்ட ஆஃபாயில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பெரியநாயகிபுரத்தில் நேற்று தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த மாரிச்செல்வம் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 450 கிராம் கஞ்சா,ரூ.4,000 இரண்டு கத்தி போன்றவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையம் அருகே உள்ள செங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று (27.04.2024) காலை 9.00-மணி முதல், மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும். இது தொரட்பாக அந்த ரயில்வே கேட்டிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.