Tamilnadu

News June 4, 2024

கிருஷ்ணகிரியின் மகுடம் யாருக்கு?

image

2024 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் மொத்தம் 71.37% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் கோபிநாத்தும் (காங்), அதிமுக சார்பில் வி.ஜெயபிரகாஷும், பாஜக சார்பில் நரசிம்மனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.

News June 4, 2024

புகார் குழு அமைக்க ஆட்சியர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள புகார் குழு அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்படி புகார் குழு அமைக்க மகளிர் உரிமை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News June 4, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்

image

புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்தில் துணைராணுவப் படையினருக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவப்படையினர் செல்போன் கொண்டுவந்ததற்கு, காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

குடியரசு தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடிதம்

image

சென்னை
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி, சி.டி.செல்வம் உள்ளிட்ட 7 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அதில், “வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற வேண்டும். பிரச்சனை எதுவும் ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

News June 4, 2024

செந்துறை அருகே தேர்த் திருவிழா

image

செந்துறை வட்டம் குமிழியம் கிராமத்தில் எழுந்தருளும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு விநாயகர், மாரியம்மன் திருத்தேரோட்டம் இன்று (3.6.2024) ஊராட்சி மன்ற தலைவர், நாட்டாண்மைக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பொது மக்கள் ஒன்றிணைந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

News June 4, 2024

தூத்துக்குடி: கனிமொழி மீண்டும் ஜெயிப்பாரா?

image

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி மக்களவை தொகுதியை அனைவரும் உற்று கவனித்து வருகின்றனர்.  தூத்துக்குடியில் 2வது முறையாக கனிமொழி போட்டியிட்டுள்ளார். எனவே இத்தொகுதியின் முடிவுகளை மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

News June 4, 2024

திண்டுக்கல்: வாக்கு எண்ணிக்கை 133 சுற்றுகள்

image

திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுகிறது. பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும். மொத்தம் 133 சுற்றுகள். வாக்கு எண்ணிக்கை மேசைகள் 84, அஞ்சல் வாக்கு எண்ணிக்கை மேசைகள் 9 ஆகும். வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணி அளவில் தொடங்குகிறது.

News June 3, 2024

தலைமலை சாஸ்தா கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும்

image

கடையம் அருகே ராமநதி அணை அருகில் தலைமலை சாஸ்தா கோவில் உள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி முதல் மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என  ஆட்சியர் ஆணை பிறப்பித்தார். இதனால் ராமநதி அணை மூடப்பட்டது. தற்போது மழை குறைந்தது. இதனையடுத்து சாஸ்தா கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

சிவகாசியை அதிர வைத்த கொலை

image

சிவகாசி முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துப்பாண்டி (38). இவர் இன்று இரவு சிவகாசி அண்ணா காலனி பகுதியில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு கொலை செய்த மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 3, 2024

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

கடலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி கடலூர் எஸ்.பி. ராஜாராம் மேற்பார்வையில் ஏ.எஸ்.பி.க்கள் அசோக்குமார், அர்னால்டு ஈஸ்டர், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 12 டி.எஸ்.பி.க்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் மற்றும், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!