Tamilnadu

News April 27, 2024

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி

image

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் பயிற்சி சேர்க்கை முன்பதிவு வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 7338720704, 9698342166 என்ற எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2024

கோடைகால பயிற்சி முகாம்

image

தேனி மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கபடி, கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி போட்டிகள் 29.04.24 முதல் 13.05.24 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கு பயிற்சி கட்டணம் ரூ.200 வீதம் ஆன்லைன்/Pos machine மூலமாக மட்டுமே பெறப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703505 தொடர்பு கொள்ளலாம்.

News April 27, 2024

திருவிழாவில் மோதல் 21 பேர் கைது

image

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை தடநாச்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று இரவு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் சிலர் நடனமாடியுள்ளனர். அதை மற்றொரு தரப்பினர் தடுத்தபோது இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. கற்கள், பாட்டில் கம்பு ஆகியவற்றால் மாறி மாறிதாக்கி கொண்டதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பைச் சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News April 27, 2024

பட்டாசு வெடித்ததில் முதியவர்

image

கொடியாலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோவில் பத்து கிராமத்தில் உள்ள தூண்டி வீரன் கோயிலில் ஆண்டு பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் வாகனங்களில் குதிரை, சுவாமி சிலைகளை ஏற்றி வரும்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது அதிக சத்தத்தோடு பட்டாசு வெடித்ததில் முதியவர் பயந்து ஓடியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News April 27, 2024

வெறி நாய் கடித்து காயம் – 8 பேர் அனுமதி

image

திருவாடானையில் நேற்று( ஏப்ரல். 26) தெருவில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்களை கடித்துத் குதறியுள்ளது. இதில் திருவாடானை அருகே உள்ள திருவடிமிதியூர் கிராமத்தைச் சேர்ந்த பாப்பு(65), திருவாடானை சமத்துவபுரம் வளர்மதி(30), ஈரோட்டைச் சேர்ந்த ரெங்கநாதன்(38) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

News April 27, 2024

கையாடல் செய்த மேலாளர் கைது

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் பொறுப்பாளராக ஷேக் உசேன்(38) என்பவர் அவிநாசி காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் ஆனந்தன்(29) என்பவர் தனது அலுவலகத்திலிருந்து 1.75 லட்சத்தை கையால்டல் செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவிநாசி போலீசார் ஆனந்தனை கைது செய்தனர்.

News April 27, 2024

சென்னை: முதலமைச்சர் ‘மாநில இளைஞர் விருது’க்கு ரூ.1 லட்சம்

image

சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்கள் முதலமைச்சர் ‘மாநில இளைஞர் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று 15 – 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும். www.sdat.tn.gov.in தளத்தில் மே 1 – 15க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்.

News April 27, 2024

நெல்லை: கடும் எச்சரிக்கை

image

திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைக்கின்றனர். இவ்வாறு செயல்படும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கையை இன்று (ஏப்.26) அனுப்பியுள்ளது. இதையும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

News April 27, 2024

அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நேற்று (ஏப்ரல் 26) பழங்குடியின செயல்பாட்டாளர் வழக்கறிஞர் அகத்தின் மற்றும் விசிக முற்போக்கு மாணவர் அணி நிர்வாகி பிரசாந்த் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்பேத்கர் சிலைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை மனு அளித்தனர்.

News April 27, 2024

விடுதியில் சேர அலுவலர் அறிக்கை

image

நெல்லையில் 2024-25 ஆம் ஆண்டில் விளையாட்டு விடுதி, முதன்மை விளையாட்டு மையம் விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிரேம்குமார் நேற்று (ஏப்‌.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்புக்கு 9514000777 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!