India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே.1 இல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்றுவரை கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான தகவல்கள்,வழிகாட்டுகளோ கிராமங்களுக்கு வழக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என திருப்பத்தூர் எம்எல்ஏவும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று(ஏப்.26) செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், ஜூன் 4க்கு பிறகு கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த காமாட்சிபுரம் எல்லப்பட்டியில் ஸ்ரீ கெண்டுகாட்டம்மாள், ஸ்ரீ பொம்மையா சாமி, ஸ்ரீ மாலைக்கோயில், ஸ்ரீ மண்டு கோயில் அமைந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கிய இந்த கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். பின்னா் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது.
ஆம்பூர் தாலுகா போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோலூர் ஊராட்சி புது சோலூரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சாந்தகுமார் (30) அதே பகுதியில் வெளி மாநில மதுபாட்டில்களை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 30 வெளி மாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன்பட்டி ஆதிதிராவிடர் காலனி சமுதாயக்கூடம் எதிரே உள்ள குப்பை மேட்டில், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்த வடசேரி விஏஓ கணேசன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று(ஏப்.26) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம் தோக்கவாடி பிரதான சாலையில் இயற்கை உபாதை கழிக்க தோக்கவாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாசலா, அவரது கணவர் முனியப்பன் நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்(33). இவருக்கு ஏப்.23ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.26) மனைவி மற்றும் குடும்பத்தாருடன் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலின் ரிசர்வ் பெட்டியில் அரக்கோணம் வந்து கொண்டிருந்தார். அப்போது, 20 பவுன் நகை, ரொக்கம் ரூ.10,000 வைத்திருந்த பை திருடுபோனது. இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள தேக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த உச்சிமாகாளி (53) என்பவர் நேற்று இரவு அப்பகுதியில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு சைக்கிளில் அவரது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கார் ஒன்று அவரது சைக்கிள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் சிட்லப்பாக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 27 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை லாக்கருடன் திருடி சென்றனர். இச்சம்பவத்தில் கொலை வழக்கு குற்றவாளியான வெள்ளை செந்தில் மற்றும் கால் டாக்சி ஓட்டுநர் குமரன் இருவரை நேற்று போலீசார் கைது செய்த நிலையில் செல்வகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.
கூடலூர் மார்த்தோமா நகர் பகுதியில் நேற்று இரவு (ஏப். 26) காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சாலையோர பலாப்பழம் கடையிலிருந்து காட்டு யானை ஒன்று பழத்தை எடுத்து செல்வதை கண்டனர். உடனே போலீஸ் வாகனம் சைரன் ஒலிக்க செய்து யானையை விரட்டினார்கள். வறட்சி காரணமாக வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி உலா வருவது வாடிக்கையாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.