Tamilnadu

News April 27, 2024

குப்பைகளை அகற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும்

image

கொள்ளிடம் அக்ரஹார தெருவில் கடைத்தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மே 5ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தமிழ்நாடு வணிகர் சங்க மாநாட்டில் வியாபாரிகள் திரளாக பங்கேற்பது,கொள்ளிடம் கடைதெரு பகுதிகளில் குவியலாக தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றாவிட்டால் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 27, 2024

கோவை மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க 

image

கோவை மாவட்டம் ஊஞ்சபாளையம் விநாயகர் கோவில் எதிரில் இன்று (ஏப்ரல். 27)ஆதார் திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் முகவரி திருத்தம், மொபைல் நம்பர் இணைத்தல், பின்கோடு எண் மாற்றுதல், புதிதாக ஆதார் எடுத்தல், உள்ளிட்ட சேவைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 27, 2024

விருதுநகர்:நாடகம் பார்க்கச் சென்றவர் மீது தாக்குதல்

image

திருச்சுழி அருகே மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் பாண்டி (33). இந்நிலையில் பாண்டி தொட்டியாங்குளம் கிராமத்தில் நாடகம் பார்க்கச் சென்றதாகவும், அப்போது நாடக மேடை அருகே வைத்து தொட்டியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து பாண்டியை கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாண்டி புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 27, 2024

தஞ்சாவூர்: 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

image

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே கீழக்கோவில் பத்து கிராமம், அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் வனரோஜா. இவரது மகள் சரண்யா(14), 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போன் பார்த்ததாக தாய் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சரண்யா, நேற்று(ஏப்.26) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 27, 2024

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு தடுப்பூசி

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் உயிர்காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான மூன்றாம் சுற்று தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 29ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

தொழிலாளர் உதவி ஆணையர் முக்கிய அறிக்கை

image

நெல்லை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா விடுத்துள்ள செய்தி குறிப்பு: கடைகள் வர்த்தகம், உணவு நிறுவனங்கள், பீடி போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1.4.2024 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் இதை உயர்த்தி வழங்க வேண்டும் விளங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

News April 27, 2024

திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்

image

திருவாரூர் பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 8:30 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு மாங்குடி, மாவூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியே காலை 10 .05 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடையும். அதேபோல் மறு மார்க்கமாக மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 6.55 மணிக்கு திருவாரூர் வந்தடையும்.

News April 27, 2024

திருச்சி:பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

image

திருச்சி கருமண்டபம் நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக புகார் வந்தது, இதை அடுத்து கன்டோன்மென்ட் போலீசார், நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில், திருப்பத்தூரை சேர்ந்த செந்தில்குமார் (48) மூன்று பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசாரின் அறிக்கையை புலனாய்வு செய்த கமிஷனர் காமினி செந்தில்குமாரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News April 27, 2024

காஞ்சிபுரம்: குறைந்த செலவில் இரத்தம் சுத்திகரிப்பு!

image

காஞ்சிபுரம் கீழ்அம்பியில் முதல்முறையாக ஏழை எளிய மக்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்ட ரோட்டரி சங்கம் மூலம் சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் இயந்திரத்துடன் கூடிய மருத்துவமனை ரூ.3 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.2,000க்கு மேல் செலவாகும் நிலையில், இங்கு சேவை கட்டணமாக அதே தரத்துடன் ரூ.750 மட்டும் செலவு என கூறப்படுகிறது.

News April 27, 2024

கோவை மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க 

image

கோவை மாவட்டம் ஊஞ்சபாளையம் விநாயகர் கோவில் எதிரில் இன்று (ஏப்ரல். 27)ஆதார் திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் முகவரி திருத்தம், மொபைல் நம்பர் இணைத்தல், பின்கோடு எண் மாற்றுதல், புதிதாக ஆதார் எடுத்தல், உள்ளிட்ட சேவைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!