Tamilnadu

News April 27, 2024

தருமபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

தருமபுரியில் நேற்று (ஏப்.26) 105.8 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தருமபுரி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

கோவை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

கோவையில் நேற்று (ஏப்.26) 102.56 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று கோவை மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கோவை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

வைகை அணையின் நீர்மட்டம் 57.41 அடியாக குறைவு

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்து விட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 57.41 அடியாக குறைந்து காணப்படுகிறது.

News April 27, 2024

பூத் சிலிப் விநியோக முறையில் மாற்றம் தேவை – செல்லூர் ராஜு

image

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முன்பு பூத் சிலிப் விநியோகத்தை அரசியல் கட்சிகள் செய்தன. அதில் எல்லோருக்கும் பூத் சிலிப் கிடைத்தது. தற்போது அரசு ஊழியர்கள் மட்டுமே பூத் சிலிப் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இந்த பணி சரிவர நடைபெறவில்லை. 55% முதல் 60% வரை மட்டுமே வழங்கப்பட்டது. எனவே பூத் சிலிப் விநியோக முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

News April 27, 2024

கோவை மாணவி, அமெரிக்காவில் கைது

image

பாலஸ்தீனத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை உடனே நிறுத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். இதில் அமெரிக்காவில் படித்து வரும் கோவை மாணவி அச்சிந்தியாவை அமேரிக்கா போலீசார் கைது செய்தனர்.

News April 27, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்து; 20 பேரின் நிலை?

image

நாகர்கோயிலில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் பேருந்தை திருச்செந்தூரை சேர்ந்த ஹரிகரன் என்பவர் ஒட்டிச்சென்றுள்ளார்.இன்று அதிகாலை ஆசனூர் அருகே சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 27, 2024

திருவிடந்தை பெருமாள் கோவில் சிறப்பு

image

108 வைணவ திவ்ய தேசங்களில் 63ஆவது திவ்ய தேசமான நித்தியக் கல்யாண பெருமாள் கோயில் செங்கல்பட்டு, திருவிடந்தையில் அமைந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டு 11ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பராமரிக்கப்பட்டது. இக்கோவிலில் சிற்பத்தூண் மண்டபம், மற்றும் கிபி. 959 ஆம் ஆண்டுகால கல்வெட்டுக்களும் உள்ளன. தென்கலை வழிபாட்டு முறை இங்கு பின்பற்றப்படுகிறது.

News April 27, 2024

நாமக்கல்:வெப்பநிலை 107.6 டிகிரியை தொடும்

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் வெப்பம் 104.9 டிகிரி பாரன்ஹீட்டாகவும் , இரவு வெப்பம் 68.9 டிகிரி பாரன்ஹீட்டாகவும் நிலவியது. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 107.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் , இரவு வெப்பம் 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 27, 2024

கடலூரில் அதிகபட்சமாக 96 டிகிரி வெயில் பதிவு!

image

கடலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை குறைவாக பெய்ததால் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 100 டிகிரி வரை வெப்பம் உயரவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று வெயில் அளவு அதிகபட்சமாக கடலூரில் 96 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

News April 27, 2024

திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.

image

தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்.இவரோடு கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

error: Content is protected !!