India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள் கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற சித்திரை திருவிழாவின் நிறைவு நாளான இன்று கள்ளழகர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி நகர் முழுவதும் வீதி உலா வந்து இன்று மீண்டும் கோயிலுக்குள் சென்றடைந்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் முழங்க கள்ளழகரை வழிபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கணேசப்புரத்தை சேர்ந்த நாகர்கோவில் காசி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காசிக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த ராஜேஷ்சிங் என்பவர் துபாயில் ஓட்டுனராக வேலை பார்த்து தலை மறைவாக இருந்தார். இந்நிலையில் சென்னை திரும்பிய ராஜேஷ்சிங்கை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்” என்றார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் வேல்முருகன். இவர் மகன் பேச்சி (26) கடந்த வாரம் வெளியான யூபிஎஸ்சி தேர்வில் 576வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவரை பல்வேறு தரப்பினர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதே வேளையில் தூத்துக்குடியில் உப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான பழைய உப்பின் விலை தற்போது தரத்துக்கு ஏற்ப ஒரு டன் ரூ.4 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏடிஎம் மையம் இல்லாததால் பயணிகள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் ஏடிஎம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தற்போது IOB வங்கியின் சார்பில் பேருந்து நுழைவு வாயிலில் புதிய ஏடி.எம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 19, 2024 அன்று வாக்களிப்பு நாள் வாக்குப்பதிவு முடிவதற்கு முன்பே 1,00,000 வாக்குகள் காணவில்லை என புகார் கூறினார். இந்த நிலையில் இன்று விடுபட்டவர்கள் வாக்களிக்கும் வரை முடிவை நிறுத்தி வைக்கக்கோரி ஆஸ்திரேலியாவில் மருத்துவராக உள்ள சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஒசூர் அடுத்த தளி ஜெயந்தி காலனியில் ஆண் சடலம் கொலை செய்து கிடப்பதாக தளி போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கொலை செய்யப்பட்டவர் குனிக்கல் கிராமத்தை சேர்ந்த சதீஷ்(34) என்பது தெரியவந்தது. சதீஷ் ஏற்கனவே ஒரு கொலை, 3 கொலை முயற்சி என 6 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் முன்விரோத காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகரை சேர்ந்த பழனிவேல் மதுபோதையில் குடிசையில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர், பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது மரணத்தில் சந்தேகமடைந்த பெற்றோர் மருத்துவமனையில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழையூரை சேர்ந்த கார்த்திக் (25) தனது தந்தையிடம் செல்போன் வாங்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திக் கடந்த 23ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.