Tamilnadu

News June 2, 2024

அம்மனுக்கு ஆதார் கார்டு அடித்த மக்கள் 

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான காளியம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் பால்குடம் முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று  அம்மனுக்கு ஆதார் கார்டுடன் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

News June 2, 2024

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

திருநங்கைகளுக்கான நல வாரிய அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை எளிதில் பெறும் வகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 21ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், மாவட்டத்தின் அனைத்து திருநங்கைகளும் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் கேட்டு கொண்டுள்ளார்.

News June 2, 2024

காவலரை மிரட்டிய 3 கைது செய்து நடவடிக்கை

image

மன்னார்குடி வட்டம் காவலரை பணியில் இருக்கும் பொழுது கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். வடபாதி, காந்தி நகரை சேர்ந்த அன்பழகன் மகன் ராமகிருஷ்ணன் (29), அண்ணாதுரை மகன் அமுதக்குமார் (29), மகாலிங்கம் மகன் சிவா (30) ஆகிய 3 கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News June 2, 2024

சென்னையில் 25,000 பேருக்கு வேலை!

image

சென்னை ஒஎம்ஆர் சாலை முடிவில் சிறுசேரியில் மிக பிரம்மாண்டமான அலுவலகத்தை டிசிஎஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. அதே பகுதியில், மேலும் ஒரு அலுவலகத்தை அந்நிறுவனம் கட்டி வருகிறது. ரூ.876 கோடி மதிப்பீட்டில் சுமார் 33.4 லட்சம் சதுர அடி பரப்பளவில், 11 மாடிகள் கொண்ட 3 கட்டடங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

News June 2, 2024

சிவகங்கை: வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர்

image

சிவகங்கை மாவட்டத்தில் ஜூன்.4ஆம் தேதி காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து, வாக்கு எண்ணும் மையத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் ஹரிஸ் ஆய்வு மேற்கொண்டனர். இதில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 2, 2024

திருச்சி அருகே விபத்து: ஒருவர் பலி

image

தொட்டியம் அருகே மேலக்கார்த்திகைப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்த பொன்னன் மகன் சுப்ரமணியன் (23). இவர் நேற்று இரவு கீழக் கார்த்திகைபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டிற்கு சுமார் இரவு 1 மணி அளவில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி
சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொட்டியம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். 

News June 2, 2024

அரளி விதை சாப்பிட்டு தற்கொலை

image

செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இருளாண்டி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இவர் அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் நேற்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 2, 2024

வேலூர்: ராணுவ வீரர் உட்பட 3 பேர் மீது வழக்கு

image

காட்பாடி வண்டறதாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சந்திப், ராணுவ வீரர். விடுமுறைக்கு சொந்த ஊர் வந்துள்ளார். அப்போது அவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சந்திப் பிரியதர்ஷினியை தாக்கியுள்ளார். இது குறித்து பிரியதர்ஷினி காட்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நேற்று ராணுவ வீரர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News June 2, 2024

விருதுநகரில் விஜயபிரபாகருக்கு வெற்றி வாய்ப்பு?

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் வெற்றியை பெறுவதில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு இடையே போட்டிகள் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விருதுநகரில் விஜய பிரபாகரன் வெற்றி பெறுவார் என ஒரு ஜோதிடர் கணித்துள்ளதாக இன்று நடிகர் எஸ்.வி சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 2, 2024

ராணிப்பேட்டை: விவசாய கிணற்றில் ஆண் சடலம்

image

ஆற்காடு தாலுகா திமிரி அடுத்த மேலதாங்கல் களர் குடிசை கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திமிரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

error: Content is protected !!