India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில். நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது ஆலோசனை கூட்டத்தில். நடைபெற்று மனிதன் நாடாளுமன்ற தேர்தல். காலங்களில் சிறப்பாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளது. தடகளம், கால்பந்து, கோ-கோ, கூடைப்பந்து, ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை 29.04.2024 முதல் 13.05.2024 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் நாகல் நகர், பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம். இந்த ஆலயத்தில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட அன்னதான கூடம் கட்டிமுடிக்கப்பட்டது. இதில் வருகின்ற மே மாதம் 1ம் தேதி புதன் கிழமை முதல் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம் நடைபெற உள்ளது என்று கோயில் நிர்வாகி முருகன் தெரிவித்துள்ளார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருப்பத்தூர் ரயில் நிலையம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் பயணிகள் பெரியோர் முதல் சிறியவர்கள் வரை எளிமையாக பிளாட்பாரங்களை கடக்க லிப்ட் வசதியும் எஸ்கலேட்டர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் சுஜாதா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் தங்க மழை சிறுசேமிப்பு திட்டம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை நடத்தி வந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சுஜாதா ஆகிய இருவரும் ஏஜெண்டுகள் மூலமாக ரூ.50 லட்சத்துக்கு மேல் நிதி மோசடி செய்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் போலீசார் பன்னீர்செல்வத்தையும் அவரது மனைவி சுஜாதாவையும் இன்று கைது செய்தனர்.
வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த ரோகிஸ்வரன் இவர் வேட்டைக்காரன்இருப்பு கிராமத்தில் உள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ்சில் உரிமம் பெற்று இணையதள சேவை வழங்கி வருகிறார். இந்த நிலையில், நாலு வேதபதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் தொழில் போட்டி காரணமாக ஆப்டிகல் இணையதள ஒயரை துண்டித்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் ரோகிஸ்வரன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடியாத்தம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு சொந்தமான மாடு இன்று (ஏப்ரல் 27) இவரது விவசாய கிணற்றில் கால் தவறி விழுந்தது. இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
கரூர் சின்னதாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கட்சி நிர்வாகிகள் கைதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனுமதி இல்லாமல் ஒன்று கூடி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக வி.ஏ.ஓ.அகிலா கொடுத்த புகார்படி மாவட்ட தலைவர், உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சின்னதாராபுரம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கம்பம் அருகே உள்ள காமயவுண்டன்பட்டி நாராயணதேவன் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று பாசனம் மூலம் புடலங்காய் முட்டைக்கோஸ் பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் பேபி புடலங்காய் தற்போது நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயி சங்கிலி தெரிவித்தார். கிலோ மூன்று ரூபாய்க்கு எடுத்து வந்த நிலையில் தற்போது கிலோ ரூபாய் 15க்கு வாங்கி செல்கின்றனர் என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
முன்னாள் கூடுதல் தலைமை செயலாளரும், நீலகிரி சுற்று சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான சுர்ஜித் கே. சவுத்திரி நீலகிரி ஆட்சியருக்கு இன்று மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் குன்னூர், எடப்பள்ளி, இளித்தொரை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் விதி மீறி பொக்லைன் மூலம் பாறை உடைக்கும் முயற்சி நடக்கிறது. இதனால் நிலச்சரிவு அபாயம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
Sorry, no posts matched your criteria.