India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணல்மேடை சேர்ந்த சண்முகம் மனைவி ஜானகி (70) ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என ஜானகியின் 2வது மகன் பாரதிதாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவரின் முதல் மகன் பாரிராஜன் தான் தாயை அடித்து கொலை செய்ததாக சிபிசிஐடி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
மதுரை யா. ஒத்தக்கடையைச் சோ்ந்த 18 வயது பூா்த்தி அடையாத சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், அவருக்கு 2 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிப்புக்குள்ளான குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அந்தக் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதனை அடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி., மேற்பார்வையில், சைபர் கிரைம் போலீசார் பொது மக்களிடம் ஆன்லைன் டாஸ்க் கம்ப்ளீட் பிராடுகளில் ஈடுபட்டு வந்த நந்தகோபாலன் மற்றும் சாமிநாதன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து கைது செய்தனர். அவர்களிடம் ரூ.6,72,600 பணம், சிம் கார்டு-8, ஏடிஎம் ஸ்வைப் மிஷின்-1 மொபைல்-7, செக் புக்-15, ஏடிஎம் கார்டு-19 போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
உதகை காந்தல் அருள்மிகு மூவுலகரசி அம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் நேற்று ( 27 தேதி ) மலையாள சமூகத்தார் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . அதை தொடர்ந்து இரவு 8 மணியளவில் மூவுலகரசி அம்மன் அலங்காரத்தில் திரு உலா நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி வழியாக முக்கோணம் சென்று மீண்டும் இரவு 10 மணியளவில் கோயிலை வந்தடைந்தது.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு
மனநல மருத்துவ சங்கத்தின் சார்பில் நேற்று தொடங்கிய 2 நாள் மனநல மருத்துவ கருத்தரங்கிற்கு மாநிலத்தலைவர் டாக்டர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கருத்தரங்க மலரை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வெளியிட்டார். இதில் மூத்த மருத்துவர்கள் ராமசுப்பிரமணியன், ஜெயந்தினி , விஜய்சுவாமிநாதன் , அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் மலையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில் மருதிப்பட்டியை சேர்ந்த சந்திரன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிவகங்கை எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் ஒப்புதலின் அடிப்படையில், இராமநாதபுரம் மாவட்ட சிறையிலிருந்த சந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றதாக எஸ்பி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட தமுமுக மருத்துவ அணி செயலாளர் சங்கர். இவரிடம் கோவை காளிமேடு மணிகண்டன் என்பவர் ஆம்புலன்சுக்கு அவசர சிகிச்சை கருவிகள் பொருத்தித்தருவதாக ரூ.3.50 லட்சம் பணம் பெற்று ஆம்புலன்சை எடுத்து சென்றுள்ளார். இது வரை அவசர சிகிச்சை உபகரணங்கள் பொருத்தித்தரவில்லை . ஆம்புலன்சை திருப்பியும் தரவில்லை என கூறப்படுகிறது. சங்கர் புகாரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் பேசிய ராஜவேல் என்பவர் நீங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ.10 கோடி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் வீடியோ காலில் பேசிய ராஜவேல் என்பவருக்கு ரூ.4.88 லட்சம் பணமாக கொடுத்து ஏமாந்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் ராஜவேலை கைது செய்தனர்.
தி.மலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுரைப்படி காந்தி சிலை முன்பு கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க கரும்பு ஜூஸ் மற்றும் நீர்மோர் ஆகியவற்றை மாவட்ட பிரதிநிதி இல.குணசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சு. ராஜாங்கம், நகர மன்ற உறுப்பினர் மண்டி ஆ. பிரகாஷ் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.