India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சி எமப்பேர் பகுதி முரளி(20) என்ற இளைஞர் தனது வீட்டு அருகில் தனது நண்பரான அருகில் உள்ள சின்ன சேலம் வட்டம் பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (27) என்பவரை உடன் வைத்துக்கொண்டு கஞ்சா வியாபாரம் செய்த போது போலீசார் இவர்கள் இருவரையும் பிடித்து இன்று கைது செய்தனர். பின்னர், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 50ம் ஆண்டு நிறைவடைந்தது ஒட்டி ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், எழுத்தாளர் கல்வியாளர் பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட இறையன்பு, செவிலிமேடு தேவகி வெட்டிங் கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் வருகை புரிய உள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.87-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ. 92 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல் கறிக்கோழி கிலோ ரூ.119- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கிலோவுக்கு ரூ.3 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.122 ஆக அதிகரித்துள்ளது.
களக்காடு புது தெருவை சேர்ந்தவர் யாபேஸ்(43) .இவர் கடந்த 25 ஆம் தேதி இரவு தனது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து நேற்று மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல செயலாளர் அய்யப்பன், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட தலைவர் சித்தமல்லி பழனிச்சாமி உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட பாமக நிர்வாகிகள் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததையொட்டி சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்பொழுது மார்ச் மாதத்தில் இருந்து வரலாறு 100 % மேல் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இங்கு நகர்ப்புறம் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் சாலையோரம் மற்றும் சிறு வியாபாரிகள் தர்பூசணி பழங்களை அண்டை மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்து விற்பனைக்காக குவித்துள்ளனர். பொதுமக்களும் வெயிலை சமாளிக்க தர்பூசணி போன்ற பழங்களை அதிகமாக வாங்கிச் செல்வதால் விலை உச்சத்தில் உள்ளது.
விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அளவிலான தேர்வு கடலூரில் நடைபெறுகிறது. இதில் மே மாதம் 10-ம் தேதி மாணவர்களுக்கும், 11-ம் தேதி மாணவிகளுக்கும் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு வருகிற 8-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கவிதா என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 4.8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் மலைகளில் வாழும் பிற உயிரினங்களும் வெயிலின் கொடுமைக்கு ஆளாகின்றன. இதனால் சத்துவாச்சாரி மலைப்பகுதியில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் அவரது நண்பர்களுடன் நேற்று (ஏப்ரல் 27) சிட்டு குருவிகள் மற்றும் பறவைகளுக்கு மரக்கிளைகளில் தண்ணீர் பாட்டில்களில் தண்ணீரை வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.