India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் பண்பரசு (22). இவர் நேற்று தனது நண்பர்களுடன் இறகு பந்து விளையாடியபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள், பண்பரசை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (62).நேற்று சீனிவாசன் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் பைக்கில் திருச்சுழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பங்கஜம் பெட்ரோல் பங்க் அருகே பின்னால் வந்த மற்றொரு பைக் மோதி சீனிவாசன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கறம்பக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று கறம்பக்குடி கடைவீதி பகுதியில் சோதனை நடத்தினர் அப்போது தாணியக்கடை முக்கம் அருகே புகையிலை பொருட்களை விற்ற
அஜித்குமார், முகாசின் ஆகியோரை போலீசார்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தமுக்கத்தில் நடக்கும் சித்திரை பொருட்காட்சி மக்களவை தேர்தலை காரணம் காட்டி இதுவரை துவங்காததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனிடையே அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மே.10 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அரவக்குறிச்சி தாலுகா லிங்கத்துப்பாறையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (43). இவர் தனது பைக்கில் மொச்சகொட்டபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு பைக் மோதியதில் சுப்பிரமணி மற்றும் நாச்சிமுத்து ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். சுப்பிரமணி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கரூர் மாநகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
போச்சம்பள்ளி அருகே தட்டக்கல் பகுதியில் நேற்று தேவாங்கு ஒன்று அடிப்பட்ட நிலையில் இருந்தது. இதை பார்த்த சிவகுரு என்பவர் அதை மீட்டு, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் நேரில் வந்து அடிப்பட்ட நிலையில் இருந்த தேவாங்கை மீட்டு சென்றனர்.
புதுவை நெட்டப்பாக்கம் சொரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ராம நவமி உற்சவம் துவங்கி, தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. 12வது நாளான நேற்று காலை திவ்ய பிரபந்த சேவையும், இரவு சீதா கோதண்டராமன் திருக்கல்யாணம் உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் பண்பரசு (22). இவர் நேற்று தனது நண்பர்களுடன் இறகு பந்து விளையாடியபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள், பண்பரசை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அரியலூர் தேளூர் GKM நகர் பகுதியில் உள்ள மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கயர்லாபாத் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணபிக்கலாம் என தர்மபுரி கலெக்டர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற 15-35 வயது தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மே 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.