India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேற்று சென்னையை சேர்ந்த வாலிபர்கள் 7 பேர் ஈஷா மையத்திற்கு செல்ல கோவை வந்தனர். பின், மீண்டும் சென்னை செல்ல ரயில்வே ஸ்டேஷன் வந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதை கண்ட ஆட்டோ டிரைவர் அவரை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து விடுவித்தனர்.
கடலூர் ஸ்பீக் ஈஸி ஸ்போக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டிடியூட்டில் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு சிறப்பு கோடைகால பயிற்சி வகுப்பு வரும் 1ஆம் தேதி துவங்குகிறது. இங்கு சர்வதேச தரத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 7708133111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஸ்பீக் ஈஸி ஸ்போக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டியூட் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 இளம் பெண்களை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களது குற்ற சம்பவங்களை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவின் பேரில் 4பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நேற்று மதுரைமத்திய சிறையில் அடைத்தனர்.
தா.பழூர் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா. இவர் நேற்று கொள்ளிடம் கரையோரம் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது கொள்ளிடத்தில் இருந்த முதலைக் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து சின்னம்மா அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து த.பழூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
சென்னை நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 30 – ம் தேதி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 30ம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். பொதுமக்கள் போதிய தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நேற்று நள்ளிரவில் சென்னை – பெங்களூர் சாலையில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பிரதாப் (21) என்பவர் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கம்பியின் மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்.28) அதிகாலை உயிரிழந்தார்.
தி.மலை மணலூர்பேட்டை சாலை மேல்புத்தியந்தல் அருகே நேற்று இரவு கார் ஒன்று வேகமாக சென்றது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. காரை ஒட்டி சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தை சேர்ந்த ஓட்டுநர் படுகாயமடைந்தார். இவ்விபத்து குறித்து தச்சம்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை(ஏப்.29) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திலகர் நகர்,காந்தி நகர்,அத்தை கொண்டான்,இந்திரா நகர், லட்சுமி மில் காலனி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் தடை ஏற்படும் என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி மாலிக் நகரில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மதுரையில் டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றம், ஓட்டல் பார்கள் என மொத்தம் 300 மது விற்பனை கடைகள் உள்ளன. இங்கு சாதாரண நாட்களில் பீர் விற்பனை சராசரியாக 40,000 பீர் பாட்டில்கள் விற்பனையாகி வந்துள்ளது. இந்நிலையில் சமீப நாட்களாக கோடை வெயிலின் தாக்கல் அதிகரித்து வருவதால் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 72,000 பீர் பாட்டில் விற்பனையாகி வருவதாக மதுரை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.