India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை நொச்சிதோட்டம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்பவருக்கு இன்று மதியம் வைக்கோல் கட்டுகள் ஏற்றி கொண்டு லாரி வந்துள்ளது. லாரி தோட்டத்திற்குள் சென்ற போது மின்கம்பியில் உரசி தீ பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் லாரியில் பற்றிய தீயை அணைத்தனர்.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. பாஸ்ட் மின்சார ரயில் சேவையானது மாலை 6 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டோன் மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் மே மாதம் 2-ந்தேதியில் இருந்து வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னகழனி கிராமம் அருகே நேற்று இரவு மதுபோதையில் வந்த மர்ம கும்பல் கார்த்திக் என்ற இளைஞர் மீது பைக்கை ஏற்றியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், கொலை நடந்த 12 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளான கார்த்திக், அருண், சிவா மற்றும் கணேஷ் ஆகிய 4 பேரை இன்று கைது செய்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இந்நிலையில் ஒரு தனியார் ஹோட்டலில் சாப்பிட சென்ற சுற்றுலா பயணிகள் மீது சமையல் மாஸ்டர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கொடைக்கானல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
மயிலாடுதுறை, மாவட்ட காவல் எஸ்பி மீனா உத்தரவின்படி இன்று மயிலாடுதுறையில் ஏவிசி பொறியியல் கல்லூரியில் மக்களவைத் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு வெயிலின் தாக்கத்தினால், அவர்களின் நலன் கருதி பழச்சாறு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நீர்மோர் வழங்கப்படவுள்ளது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126ஆவது மலர் கண்காட்சி மே 17ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை 6 நாள் நடத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மலர் கண்காட்சி தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற மே 10ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை 11 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த சந்தனம் (32) என்ற கொக்கிகுமார் இன்று (ஏப்.28) காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாழையூத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்றும், அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர், பரமத்தி, தருமபுரி, திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 9 இடங்களில் இன்று 104 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானதாகவும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
கருங்கல் கொல்லன்விளை சேர்ந்தவர் சதீஷ்குமார்(35). இவருக்கும் ஐயன்விளையை ஜான் கோசி(34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று சதீஷ்குமாரின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற ஜான்கோசி அவரிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் சதீஷ்குமாரின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். சதீஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சிலம்பப் பயிற்சி முகாம் நடக்கிறது. நேதாஜி சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் 21 வயது மேற்பட்ட இரு பாலருக்கும் இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. மே.1முதல் 20ம் தேதி வரை தினமும் மாலை 5:30 முதல் 6:30 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு பயிற்சியாளர்
விவேகானந்தன் இன்று (ஏப்.28) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.