India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான மோயர்பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணாகுகை, பில்லர்ராக் ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்.29) வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் சென்று வரலாம். ஆனால் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் இன்று(ஏப்-28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்மபுரி தேர்தல் சம்மந்தமாக வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைத்துள்ள செட்டிகரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி அருகாமையில் சுற்றியுள்ள பகுதிகளில் 2 கி.மீட்டர் வரை ட்ரான் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அப்பகுதிகளில் எந்த வித ட்ரோன் பறக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவி. மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆதி மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் யோகா வகுப்புகள் நடைபெறவுள்ளது. மே 1 முதல் மதுரை தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:15 மணி முதல் 7 மணி வரையிலும், குழந்தைகள், பெண்களுக்கு தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரையிலும் வகுப்பு நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு 94875-37339 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை எப்பொழுதும் சம சீதோஷ்ண நிலை இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று காலை முதலே வரத் தொடங்கியுள்ளனர். சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மணிமண்டபத்திற்கு சுற்றுலா படகில் சென்றும் கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Sorry, no posts matched your criteria.