Tamilnadu

News April 29, 2024

மூதாட்டியிடம் நூதன முறையில் தாலி செயின் பறிப்பு

image

அரியலூர் பொன்க்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் உங்களுக்கு செய்வினை வைத்துள்ளனர். தாலி செயினை கழட்டி கொடுத்தால் பூஜை செய்து நீக்கிவிடுவேன் என கூறியுள்ளார். மூதாட்டியும் 5 பவுன் தாலிச் சங்கிலியை கழட்டி கொடுத்துள்ளார். அதை எடுத்துக்கொண்டு மர்ம நபர் தப்பி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

News April 29, 2024

போதை பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு

image

புதுவை திருக்கனுார், காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் கஞ்சா போதை பொருட்கள் தொடர்பான இளைஞர்கள் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. லிங்காரெட்டிப்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் முன்னிலை வகித்தனர்.
இதில் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

News April 29, 2024

சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

image

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
உலகில் அமைதி நிலவ வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினரால் நடத்தப்பட்ட நிகழ்வின் தொடக்கமாக நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதையடுத்து முற்றோதல் குழுவினரால் திருவாசகம் மற்றும் பன்னிரு திருமுறைகள் படிக்கப்பட்டது.

News April 29, 2024

கரூர்: அதிகாரிகள் ஆய்வு

image

கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும் , மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டிஎன்பிஎல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகில்களும் , சுண்ணாம்பு துகில்களும் காற்றின் மூலம் பரவி வீடுகளில் விழுந்து அவதிப்படுவதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தது தொடர்பாக அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

News April 29, 2024

காந்தி கிராமத்தில் கல்வீச்சு சம்பவம்

image

கரூர் காந்திகிராமம் ஜி.ஆர்.நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற புலியூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை உதவி மேலாளர் வீட்டில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் பட்டப்பகலில், கல் வீசி தாக்குதல் நடத்தியதாக, புகாரில் பைனான்சியர் ரகுநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது ஐந்து பிரிவுகளில் பசுபதிபாளையம் போலீசார் ஏப்.28 ம் தேதி ஞாயிற்றுகிழமை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2024

துறைமுகத்தில் பல கோடி ஊழல் – ஐ என் டி யு சி

image

அகில இந்திய ஐஎன்டியூசி துணைத் தலைவர் கதிர்வேல் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் 2011 இல் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் கொடுத்தது போல் கணக்கு காட்டி பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News April 29, 2024

புதிய ரயில்பாதை திட்டம் நிறுத்தி வைப்பு

image

ரயில்வே பயணிகளின் வசதிக்காக செய்யப்பட வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டமானது, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

News April 29, 2024

குடிநீர்த் திட்டம் சோதனை வெற்றி

image

மதுரையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், 1295.76 கோடி செலவில் செயல்படுத்தப்படும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த வாரம் முதல், மதுரையில் 100 வார்டு களுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் தொடங்கப்பட உள்ளது.

News April 29, 2024

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று எவிடன்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற கோரி நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கில் எவிடன்ஸ் கதிர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 29, 2024

திருப்பத்தூர்  எஸ்.பி. முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருந்த 155 குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மனம் திருந்தி நன்னடத்தையுடன் வாழ்க்கை நடத்தும் குற்றவாளிகளுக்கு அரசின் நிதியுதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிவித்துள்ளார். 

error: Content is protected !!