India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கணபதி நல்லாம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 17 போ் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்காக ஜெகநாதன் (30) என்பவரது சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றனா். திருச்சி சாலையில் சுங்கம் மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 17 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காட்டூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., (28-04-2024) திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். முறையாக பாதுகாக்கப்படுகின்றதா பாதுகாப்பு பணி சிறப்பாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்
குமரி வெள்ளிச்சந்தை அருகே சரல் அய்யா கோயில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(35), கொத்தனார். இவரது வீட்டின் பின்பக்கம் மின் விளக்கு எரியாததால் சரிசெய்வதற்காக, ஜன்னல் மீது ஏறியுள்ளார். அப்போது ஜன்னல் சரிந்து ராதா கிருஷ்ணன் வயிற்றுப் பகுதியில் விழுந்தது. ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளிச் சந்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டம் ஆண்டுதோறும் மே மாதம் முழுவதும் கோத்தகிரி குன்னூர் ஊட்டி கூடலூர் பகுதியில் உள்ள பூங்காக்களில் கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.கோடை விழாவை காண உள்ளூர் வெளிமாநில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமான வருகை தந்து மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு உதகையில் 126 மலர்கண்காட்சி மே 10 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற என அறிவிக்கப்பட்டுள்ளது
கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் காட்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு பால்பாண்டி என்பவரிடம் ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி அதில் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை ஒரு சில நாட்களில் கொடுப்பதாக தெரிவித்த நிலையில் பால்பாண்டி சிலருடன் வந்து பணத்தை உடனே தரும்படி கூறி மகேஸ்வரியின் தாக்கியுள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 28) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 137 மதுபாட்டில்கள், 160 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 26 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
பென்னாகரம் தொகுதியில் குடிநீர் பிரச்னை அதிகம் உள்ள கிராமங்களில் ஒரு சில கிராமங்களுக்கு நேற்று(28.4.2024), ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணியாளர்களுடன் நேரில் சென்ற எம்எல்ஏ ஜி.கே.மணி போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசித்தார். அப்போது, சைக்கிளில் தண்ணீர் குடங்களுடன் வந்த பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காக 6 கி.மீ. செல்ல வேண்டியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
பாலூர் பிர்கா பாலாற்று படுகை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் வில்லியம்பாக்கம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-28) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர். ஒரு ஏக்கருக்கு 40 மூட்டைகளை மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூரில் நேற்று அதிகபட்சமாக 97.4 டிகிரி வெப்பநிலை பதிவானது. இந்த சூழலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடலூர் வெள்ளி கடற்கரையில் குளிர்ந்த காற்று வாங்கவும், கடலில் குளித்து மகிழவும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் பாதுகாப்பாக குளிக்குமாறு அறிவுறுத்தினர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஏவிசி கல்லூரியின் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை பறக்க விட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.