Tamilnadu

News April 29, 2024

புதுக்கோட்டை அருகே வீடு புகுந்து; எல்லாம் போச்சே

image

கந்தர்வகோட்டை மேல்கரை வீதியில் வசித்து வருபவர் சையது இப்ராஹிம் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.நேற்று காலை வீட்டிற்கு சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 100 கிராம் வெள்ளிபொருட்கள் , புடவைகள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News April 29, 2024

தென்காசி அருகே விபத்து; இருவர் மரணம்

image

சங்கரன்கோவில் அருகே திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தண்ணீர் நிரம்பிய குழியில் கார் விழுந்ததில் தம்பதியர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது,சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் விலக்கு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் நிரம்பிய குழியில் கவிழ்ந்தது. தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

News April 29, 2024

கோடை வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை விலை உயர்வு

image

நாமக்கல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை உயர்வடைந்துள்ளது. எலுமிச்சை பழம் கடந்த வாரம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

News April 29, 2024

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்!

image

காஞ்சிபுரம் காந்திரோடு வழியாக செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓரிக்கை வழியாக திருப்பிவிடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இந்த போக்குவரத்து மாற்றத்தினை காவல்துறையினர் செய்துள்ளனர்.

News April 29, 2024

பொது வரைவு திட்டம்: கருத்து தெரிவிக்க வாய்ப்பு

image

நெல்லை மாநகரில் அடுத்த 17 ஆண்டுகால வளர்ச்சி தொடர்பான பொது வரைவு திட்ட அறிக்கை tirunelvelimasterplan.in என்ற பிரத்தியேக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் முடியவுள்ள நிலையில், மே மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை நகர் ஊரமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே மாநகர மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கருத்து பதிவிடலாம்.

News April 29, 2024

ராணிப்பேட்டை: 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் விரைவு மற்றும் மின்சார ரயில்களில் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று(ஏப்.28) ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரக்கோணத்தில் இருந்து கடப்பா செல்லும் மின்சார ரயிலில் சோதனை நடத்தி, ரயில்களின் சீட்டுக்கு கீழே பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

News April 29, 2024

கோடை: நெல்லை டிரைவர்கள் முக்கிய வேண்டுகோள்

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் காலை முதல் இரவு வரை அரசு பஸ்களை இயக்கும் நடத்துநர், ஓட்டுநர்கள் விரைவில் களைப்படைகின்றனர். எனவே வெயில் தாக்கத்தை போக்க ஓட்டுநர் நடத்துனர்களுக்கு ஓஆர்எஸ் பாக்கெட் வாட்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 29, 2024

திருப்பூர் கலெக்டர் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று அறிவித்துள்ளார். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற மே மாதம் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

வேப்பந்தட்டை அருகே பைக் எரிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மாவிலங்கை கிராமத்தில் சின்னச்சாமி என்பவரின் குடும்பத்தினர் விவசாய தோட்டத்தில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று(ஏப்.28) காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பு நின்ற பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துச் சென்றனர். சம்பவம் குறித்த புகாரில் பேரில் கை களத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 29, 2024

புதுவையில் மாணவர்கள் தவிப்பு

image

புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை & முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு கியூட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன்படி கியூட் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்ய இணையத்தில் தேடி வருகின்றனர். ஆனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவம் கிடைக்கவில்லை. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதை கால நீட்டிப்பு செய்ய கோரிக்கை வைத்தனர்.

error: Content is protected !!