Tamilnadu

News April 29, 2024

வேலூர் நேற்றைய வெப்பநிலை விவரம்

image

வேலூரில் நேற்று (ஏப்.28) 105.98 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

சேலம் நேற்றைய வெப்பநிலை விவரம்

image

சேலத்தில் நேற்று (ஏப்.28) 104.18 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

தி.மலை: 3 பேர் பலியான சோகம்

image

தி.மலை மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பிச்சாநத்தத்தை சேர்ந்த பவித்ரா (30). மகன் ரித்திக் (9), மகள் நித்திகா (7) ஆகிய மூவரும் விடுமுறைக்காக சென்னையில் இருந்து ஒடுக்கத்தூர் வந்தனர். விவசாய கிணற்றில் இன்று நீச்சல் கற்றுக் கொண்டிருந்தபோது மூவரும் நீரில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்ட நீதித்துறையில் 106 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

image

நாகை மக்களவைத் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் செல்லூர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆயுதம் ஏந்திய மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார், தமிழ்நாடு மாநில போலீசார் என அடுத்தடுத்து 3 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

சென்னை நேற்றைய வெப்பநிலை விவரம்

image

சென்னை, மீனம்பாக்கத்தில் நேற்று (ஏப்.28) 101.48 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

அரியலூர் தேளூர் GKM நகர் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஏதேனும் தகவல் தெரிந்தால் 9498100709 & 9898102217 இந்த எண்ணில் புகார் அளிக்கலாம் என கயர்லாபாத் போலீசார் தரப்பில் நேற்று இரவு தகவல் தரப்பட்டுள்ளது.

News April 29, 2024

2 கி.மீட்டருக்கு ட்ரோன் கேமரா பறக்க தடை

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில்,தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வாசுதேவனூர் மகாபாரதி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த கல்லூரியை சுற்றி 2 கி.மீ தொலைவிற்கு ட்ரோன் கேமராக்கள், வீடியோ கேமராக்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News April 29, 2024

கடலூர் மருத்துவமனையில் பொருத்தும் பணி

image

கடலூர், மஞ்சக்குப்பம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு, சித்தா உள்ளிட்ட பிரிவுகளுக்கு இடையே சிறிய அளவிலான டிரைனேஜ் பைப்புகள் இருந்தன. இதனால் அவ்வப்போது அடைப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் பெரிய அளவிலான ராட்சசன் பைப்புகள் பொருத்தும் பணி ஊழியர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News April 29, 2024

கல்லூரி சுற்றுப்புறத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

image

நாகை மக்களவைத் தொகுதிக்குஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் செல்லூர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த கல்லூரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள், வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!