Tamilnadu

News April 29, 2024

தூத்துக்குடி: மண்ணெண்ணெய் விளக்கில் பொதுத்தேர்வு

image

சாத்தான்குளம் அருகே பழங்குளத்தை சேர்ந்தவர் லட்சுமி. கூலி தொழிலாளியான இவர்; அரசு நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் பட்டா வழங்காததால் மின் இணைப்பு பெற முடியவில்லை. இதனால் தனது மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மண்ணெண்ணெய் விளக்கில் படித்ததாக லட்சுமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.

News April 29, 2024

மெட்ரோ ரயிலில் ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்

image

மெட்ரோ ரயில் சென்னை மக்களின் பொது போக்குவரத்திற்கு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்காக ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, சுமார் 38லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்டு இனி பயணிகளுக்கு வழங்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இக்கார்டு வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயணிக்கலாம்.

News April 29, 2024

ரயில் டிக்கெட் விற்பவர்களை கண்காணிக்க தனிப்படை

image

கோடை விடுமுறையையொட்டி, ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை பயன்படுத்தி முக்கிய நகரங்களில் முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க ரயில்வே போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News April 29, 2024

சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை

image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒவ்வொரு அரையாண்டு ஆரம்ப தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். தற்போது முதல் அரையாண்டு சொத்து வரி செலுத்த நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும் என்றார்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

வேலூர் மாவட்ட (ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட) நீதித்துறையில் 53 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

நீலகிரி மாவட்ட நீதித்துறையில் 33 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறையில் 39 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

ஒரே நாளில் ரூ.86.21 லட்சம் வரி வசூல்

image

சேலம் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை என சேலம் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று நடந்த சிறப்பு வரிவசூல் முகாமில் ஒரே நாளில் ரூ.86.21 லட்சம் வசூலிக்கப்பட்டதாக சேலம் மாநகராட்சி இன்று தெரிவித்துள்ளது. மேலும் சொத்து வரி செலுத்தாத நபர்கள் உடனே செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

News April 29, 2024

செங்கல்பட்டு: பெட்ரோல் குண்டு வீச்சு

image

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சி 12வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அமமுக கட்சியை சேர்ந்த முத்துப்பாண்டி (62). இவர் பஜனை கோவில் தெரு கொளப்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை ஹோட்டல் முன்பு கேட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்த புகாரின் பேரில் கிளாம்பாக்கம் மற்றும் ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 29, 2024

நாமக்கல்லில் 109 டிகிரி வரை வெப்பம்!

image

தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்-க்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

error: Content is protected !!