India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும். குறிப்பாக ஸ்டார் ஹோட்டல்கள், பார்கள் மூடி வைக்கப்படும். சட்டவிரோதமாக திறந்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் இரயில் வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள (old employment office) ல் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சிக்கான அட்மிஷன் இன்று (29.4.2024) நடைபெறுகிறது. இப்பயிற்சியானது 2மாத கால நடைபெறும். இப்பயிற்சி சேர விரும்புவர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சி ஆனது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் இன்று (ஏப்.29) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அரியலூர் தேளூர் GKM நகர் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஏதேனும் தகவல் தெரிந்தால் 9498100709 & 9898102217 இந்த எண்ணில் புகார் அளிக்கலாம் என கயர்லாபாத் போலீசார் தரப்பில் நேற்று இரவு தகவல் தரப்பட்டுள்ளது.
தாராபுரம் அருகே உள்ள டி.குமாரபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உண்மைக்கு புறம்பான காரணங்களை கூறி இரண்டு ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். எனவே பணியிடை நீக்கம் செய்த ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனக் கூறி இன்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் விசிக நிர்வாகிகள் மற்றும் டி.குமாரபாளையம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பெற விரும்பும் மக்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஏப்.29) தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் மண்டல இணை இயக்குநர் கோயில்ராஜா , உதவி இயக்குநர்கள் பாஸ்கரன், சுப்ரமணியன், சிவரத்னா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கோவை காரமடையை அடுத்த சிக்காரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட திருமா நகர் பகுதியில் இன்று (ஏப்ரல்.29) 40க்கும் மேற்பட்ட குடிசைகள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இது குறித்து காரமடை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பிரதம மந்திரியின் இலவச மடிக்கணினி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தங்கள் கைபேசியில் போலியாக வரும் Link-யை நம்பி அதிலுள்ள இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்! என்றும் அந்த செய்தியின் உண்மை தன்மையை அறியாமல் மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களுக்கு 4 நாட்கள் அதிகமாக வெப்பம் தாக்கக் கூடும் என்பதால் மஞ்சள் அலார்ட் விடுத்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உச்சி வெயில் நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.