India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை சிசிடிவி கேமராக்கள் சில நிமிடங்கள் செயல் இழந்தன. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நல்ல முறையில் இயங்குகிறதா என்று ஆட்சியர் வளர்மதி இன்று பார்வையிட்டார்.
சென்னையில் சமீப காலமாக காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் ஒரு சிலரின் செயல்பாடுகள், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. எனவே பணியில் இருக்கும் போது முக்கிய பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் வந்தால், செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடக் கூடாது. மீறினால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்கேட் பகுதியில் வேகவதி ஆறு கரையோரம் லாரி மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த ஓட்டுனர் தயாளன் (36) மற்றும் குமார்(50) ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
கோடை விடுமுறை நாட்களில் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு கோவை, திருப்பூர் சேலம் வழியாக மங்களூரு-பரெளனி இடையே வாராந்திர கோடைகால சிறப்பு ரயில்கள் கோடைகால சிறப்பு ரயிலாக மே.08ஆம் தேதி முதல் ஜூலை.03ஆம் தேதி வரை 23.45 மணிக்கு பரௌனி ஜன்னிலிருந்து புறப்படும் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு மங்களூரு சென்ட்ரலைச் சென்றடையும் என இன்று தெரிவித்துள்ளனர்.
உதகை எச்ஏடிபி விளையாட்டு மைதானத்தில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து பயிற்சி, குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளி மைதானத்தில் ஹாக்கி விளையாட்டுக்கான பயிற்சி இன்று தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் 10 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
திருவள்ளூர், திருத்தணியில் நேற்று (ஏப்.28) 105.8 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 ம்தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தேர்தல் வட்டாட்சியர் ஜெயக்குமார் உடன் இருந்தார்.
இராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், பாராளுமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. CCTV கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எஸ்.பி சந்தீஷ், பொதுபணித்துறை பொறியாளர் குருதிவேல்மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
துபாய் நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான அத்லெடிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூர் 9-வது வார்டு பொன்னாமணியம்மன் தெருவைச் சேர்ந்த செளந்தர் ராஜன் அவர்களின் மகன் S.கார்த்திக் என்பவர் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மூன்றாம் இடம் பெற்றுள்ள கார்த்திக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஏப்ரல் 29) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.