India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அதிகரித்து வரும் மொபைல் பணப் பரிவர்த்தனைகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. யுபிஐ (UPI) மூலம் பணம் அனுப்பும்போது அல்லது பெறும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தெரியாத நபர்களிடமிருந்து வரும் இணைப்புகளைக் கிளிக் செய்வதோ அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதோ தவிர்க்கப்பட வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
திண்டுக்கல்: வடமதுரை அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் பணம், கடையில் இருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 11:15 மணிக்கு துவங்கியது. சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் கவுசல்யா 22 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 ஓட்டுகள் பெற்றார்.
இன்று (18.8.2025) வெளியான அறிவிப்பில், சிங்கப்பூரின் ராயல் கோல்டன் ஈகிள் நிறுவனம் ரூ.4,953 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆதரவுடன் 1,967 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிப்காட்டிற்கு புதிய தொழில் பூங்கா, ரூ.667 கோடி முதலீட்டையும் 17,200 வேலைவாய்ப்புகளையும் கொண்டுவருகிறது. தென் தமிழ்நாட்டிற்கு மற்றும் ஒரு திருப்பு முனையாக அமையும் என கூறப்படுகிறது.
இன்று (18.8.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் நண்பகல் ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் – குமார் (83000-15220), பரமக்குடி – சுரேஷ்குமார் (94981-22743), கமுதி – தெய்வீகபாண்டியன் (99944-30783), இராமேஸ்வரம் – சுல்தான் இப்ராகிம் (63793-74601), கீழக்கரை – சண்முகநாதன் (94429-80687), திருவாடானை – சைபுல் ஹிசாம் (96299-40473).
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் இன்று நேரடியாக தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உரையாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசியல் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரடியாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நேரம் இருவரும் உரையாடி உள்ளதாகவும் அரசியல் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜோஹோ சார்பில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 23ம் தேதி நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க <
மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் அருணாப்பேரியில் அமைந்துள்ள அழகு முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடிமாதம் முழுவதும் தினசரி காலை மாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஆவணி மாத பிறப்பை யொட்டி இன்று அதிகாலையில் உலக அமைதி வேண்டி கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.