Tamilnadu

News April 28, 2025

அரியலூர்: ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை ஒட்டி மே 1ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சுய உதவி குழு பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

அரியலூர்: திருமண வரமளிக்கும் பஞ்சநதீஸ்வரர்

image

அரியலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள குரும்பலூரில் பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சபூதங்களை விளக்கும் வகையில் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சலிங்க சிலைகள் உள்ளன. மேலும் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலில் சிவன்-அம்பாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் செய்யவும்.

News April 28, 2025

இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது!

image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சேலம் வால்மீகி தெரு, முஹமத்புரா தெரு, கருவாட்டுபாலம், கிச்சிபாளையம் மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு ஒரு பகுதி, புலிகுத்தி மெயின் ரோடு ஒரு பகுதி, களரம்பட்டி மெயின் ரோடு ஒரு பகுதி, கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு,SMC காலனி, லட்சுமி நகர், சத்தியமூர்த்தி நகர், காந்திமகான் தெரு பகுதிகளில் நாளை (ஏப்.29) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்விநியோகம் இருக்காது. SHARE IT

News April 28, 2025

பெரம்பலூர்: திருமண வரமளிக்கும் பஞ்சநதீஸ்வரர்

image

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சபூதங்களை விளக்கும் வகையில் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சலிங்க சிலைகள் உள்ளன. மேலும் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலில் சிவன்-அம்பாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் செய்யவும்.

News April 28, 2025

விடுதிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் 2025-26 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விருப்பமுள்ள பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (ஏப்.28) தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

கனக்கம்மாச்சத்திரம் அடுத்த இலுப்பூர் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற உள்ளியம்பாக்கம் பகுதியைச் சார்ந்த அரிபாபு என்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கனக்கம்மாச்சத்திரம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூர் ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News April 28, 2025

திண்டுக்கல்லில் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை!

image

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள தூங்கனம்பட்டி சேர்ந்தவர் பரமேஸ்வரன் (38). இவர் தனது மனைவி மணிமேகலை மற்றும் மகள் மகனுடன் சென்னையில் தங்கி நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான தூங்கனம்பட்டிக்கு வந்தவர், தனது தோட்டத்தின் மோட்டார் அறையில் சேலையால் தூக்கு மாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 28, 2025

ரோட்டரி நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

மன்னார்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் (04/05/2025) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை வடசேரி சாலையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ரோட்டரி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் கண்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு சிகிச்சை குறித்து இந்த முகாம் நடைபெறவிருக்கிறது.

News April 28, 2025

ராணிப்பேட்டையில் பிரசித்திபெற்ற சிவன் கோயில்

image

ராணிப்பேட்டை அருகே அசுரன் காஞ்சன் சிவன் பக்தனாயிருந்து தவம் செய்தும்,சிவன் தரிசனம் தரவில்லை. எனவே அசுரன் குருக்களை சித்திரவதை செய்தான். இதையறிந்த ​​சிவன் ரிஷபத்தை வைத்து அசுரனை கொன்றார். அசுரன் சிவனிடம் மன்னிப்பு கேட்டதால் சிவன் மன்னித்தார், அதனால் இந்த மலைக்கு காஞ்சனகிரியென்று பெயர் வந்தது. இந்த கோயிலில் வழிபட்டால் பிரச்னைகள் நீங்குமென்பது நம்பிக்கை. இதை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

News April 28, 2025

புது புறநகர் ரயில்ல இதெல்லாம் இருக்கு தெரியுமா ?

image

செங்கல்பட்டில் இருந்து முதல் முறையாக பீச் ஸ்டேஷன் வரை புறநகர் ஏசி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 12 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் இந்த ரயிலில் அமர்ந்தும், நின்றும் 5,700 பேர் பயணிப்பதற்கான இட வசதி உள்ளது. குறைந்த பட்சம் ரூ.35 முதல் அதிகபட்சம் ரூ.105 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்காக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!