India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம் அருகே ராசிபுரத்தில் 2 சிறுமிகளை ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சங்கர் என்கிற சிவா, வரதராஜ் ஆகிய இருவருக்கும் தலா 4 ஆயிரம் அபராதமும் 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் உத்தரவு இன்று பிறப்பித்துள்ளது.
பெங்களூரில் இருந்து காட்பாடி-அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், ஆலப்புழாவிலிருந்து டாட்டா நகர் செல்லும் தன்பாத், சேலத்திலிருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை 2 மணி நேரம் காலதாமதம் ஆனது. இதேபோல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடங்கள் காலதாமதமாக வருகிறது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் இராஜராஜன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டையே கலக்கிய, அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா தேவி வழக்கில், அவர் குற்றவாளி என நீதிபதி பகவதி அம்மாள் இன்று தீர்ப்பளித்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மதியம் தண்டனை விவரம் வெளியாகவுள்ளது.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிர்மலாதேவி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை ரயில்வே கோட்டத்தில், கார்டாக வேலை பார்ப்பவர் ராக்கி. இன்று பிற்பகல், திருநெல்வேலி ரயிலில் கார்டாக திண்டுக்கல்லில் ஏறியுள்ளார். ரயில் மதுரை கூடல்நகர் பகுதியில் சிக்னலுக்காக நின்ற போது, திடீரென்று ரயில் பெட்டியில் ஏறிய இருவர், கார்டு கையிலிருந்த கைப்பையை பறித்துள்ளனர், அவர் தர மறுக்க, கத்தியால் தலையில் லேசான காயத்தை ஏற்படுத்தி பையை பறித்து சென்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார், டிக்கெட்டுகளை விற்ற சரவணன், நவீன் குமார், அவுதாப் ஹாசன், காளி, தினேஷ்குமார், பரத், கங்காதரன், ராஜேஷ் ஆகிய 8 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் 26 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
குலசேகரபட்டினத்தை சேர்ந்தவர் இந்துஜா. திருநங்கை .இன்று இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் தன்னுடன் நான்கு திருநங்கைகள் வசித்து வருவதாகவும் தங்களுக்கு திருநங்கை என்பதால் வாடகைக்கு வீடு தர மறுப்பதாகவும் எனவே தங்கள் வாழ்வாதாரம் கருதி அரசு தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டுகொண்டார் .
வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையத்திற்கும் இடையே காட்பாடி ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் மார்க்கத்தில் ரயில் இன்ஜினுக்கு செல்லும் உயர் அழுத்தம் மின் ஒயர் OHE ஒயர் இன்று துண்டாகி தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் சதாப்தி எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணம் பாசஞ்சர் ஆகிய 3 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
தமிழகக் கட்டிட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் பெரம்பலூர் வட்டம், சத்திரமனை கிராமத்தில் இன்று
இலவச சட்ட விழிப்புனர்வு முகாம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரசு மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர் குறித்து எடுத்துரைத்து பேசினார்.
இதில் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் அருகே வரட்டு பள்ளம் சோதனை சாவடி அருகே கர்நாடகா மாநிலம் ராமாபுரம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து சோயா பீன்ஸ் ஏற்றி வந்த லாரி இன்று மதியம் எதிர்பாராத விதமாக 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பர்கூர் போலீசார் படுகாயமடைந்த லாரி டிரைவர் அபிமன்னனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.