India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தற்காலிகமாக வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு வந்த சிவகுமார் அலுவலக மாடிக்கு சென்ற போது வெகுநேரமாகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் குடும்பப் பிரச்சனை காரணமாக நேற்று தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து கேரளா மாநிலம் வயநாடுக்கு செல்லும் சாலையில் உள்ள நோலக்கோட்டை பஜாருக்கு தினமும் காட்டு யானைகள் நுழைந்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 90 இடங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ மூன்றாவது தெருவில் நேற்று மதியம் மதுபோதையில் வந்த 8-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை கல்லால் அடித்து பொதுமக்களை அச்சுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்-29) மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
மயிலாடுதுறையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஏவிசி கல்லூரியில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு கண்காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி வளாகம் முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எழுத்தர்கள் மற்றும் கணினி பதிவு செய்யும் காவலர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் கைவிரல் ரேகை பதிவு செய்யும் புதிய தொழில்நுட்பம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான காவலர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்மணிக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. இதனை அறிந்த நீடூர் தமுமுக நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து பெண்ணுக்கு இன்று இரத்தம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்கி மருத்துவர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
அந்தியூர் வார சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. அவற்றில் ராசி வெற்றிலை ஒன்று இரண்டு ரூபாய்க்கும் பீடா வெற்றிலை ஒன்று 80 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டன. கோடை காலம் என்பதால் வெற்றிலை உற்பத்தி குறைந்ததால் வெற்றிலை விலை கடந்த வாரத்தை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் இன்று (29.04.2024) கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கௌரவ் குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.