Tamilnadu

News April 30, 2024

திருப்பூரில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கர தீ!

image

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிப்பட்டு பகுதியின் பின்புறம் பல வருடங்களாக விவசாயம் செய்து வந்த 10 ஏக்கர் நிலம் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு இன்றி இருந்து வரும் சூழலில், அந்த விளைநிலம் முட்செடிகள் வளர்ந்து காட்டுப் பகுதியாக மாறி உள்ளது. இந்த நிலையில் நேற்று(ஏப்.29) மாலை முட்செடிகள் மீது படர்ந்த தீப்பொறி தொடர் காற்று வீச்சின் காரணமாக மலமலவென கடும் காட்டு தீயாக மாறி உள்ளது.

News April 30, 2024

பட்டப்படிப்பு: பதவி உயர்வு வழங்க கோரிக்கை

image

வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் பட்டப்படிப்பு முடித்த அலுவலக உதவியாளர்கள் மற்றும் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சிட்டிபாபு தலைமையில் ஊழியர்கள் நேற்று (ஏப்ரல் 29) மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரனை சந்தித்து பட்டம் படித்த அலுவலக உதவியாளர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளவாறு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

News April 30, 2024

கேரளாவில் இருந்து பறவை இனங்கள் கொண்டுவர தடை

image

கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கறிக்கோழிகள், கோழிக்குஞ்சுகள், கோழிமுட்டைகள் , வாத்துக்கள், தீவனங்கள் மற்றும் இதர கோழிப்பண்ணையை சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. சஜீவனா தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News April 30, 2024

டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

image

திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் மகாராஜன், இவர் சென்னையில் லாரி டிரைவராக உள்ளார். இவர் மனைவி விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் வீட்டில் 20ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது முன்பகை காரணமாக அவரது உறவினர் தங்கச்சாமி (28) பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினார். பாளை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் விசாரித்து தங்கசாமியை நேற்று (ஏப்ரல் 29) கைது செய்தார்.

News April 30, 2024

பெண்களுக்கு இலவச பயிற்சி

image

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், மே 8ஆம் தேதி முதல் மே.22 ஆம் தேதி வரை பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும். எனவே விருப்பம் உள்ள நபர்கள் 0424-2400338, 8778323213 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

மகளிர் காங்கிரஸ் போராட்டம்

image

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றால், பெண்களின் திருமாங்கல்யம் பறிக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசினார். பிரதமர் பேசியதைக் கண்டித்து, மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் மகளிரணி மாவட்ட தலைவர் ஆர். ஷாநவாஸ் பேகம் தலைமை தாங்கினார்.

News April 30, 2024

ஆண்டிமடத்தில் முப்பெரும் விழா

image

ஆண்டிமடம் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணியின் 8 ஆசிரியர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, மகளிர் தின விழா, 25 ஆண்டுகள் பணி முடித்த 65 ஆசிரியர்களின் வெள்ளி விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில், அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 1000த்துக்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News April 30, 2024

அஞ்சல் வாக்குகள் அனுப்பும் பணி தீவிரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் செலுத்தப்பட்ட அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு மையத்திற்கு அனுப்பும் பணியினை அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று (29.04.2024) நடைபெற்றது.

News April 30, 2024

தபால் வாக்குகள் திருச்சிக்கு அனுப்பும் பணி தீவிரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் போடப்பட்ட தபால் வாக்குகளை தொகுதி வாரியாக பிரிக்கும் பணி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று பிரிக்கப்பட்ட தபால் வாக்குகள் ஆட்சியர் முன்னிலையில் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!