Tamilnadu

News April 30, 2024

பாபநாசம்: விஷ மீண்ட மாரியம்மன் கோயில் திருவிழா

image

பாபநாசம் தாலுகா நாகலூர் கிராமத்தில் உள்ள விஷ மீண்ட மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று(ஏப்.29) வெட்டாற்றில் இருந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், செடில் காவடி, பறவை காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News April 30, 2024

மயிலாடுதுறை அருகே காய்கறி வார சந்தை

image

தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகே திங்கட்கிழமை தோறும் வார காய்கறி சந்தை நடைபெறுகிறது.நேற்று மாலையில் நடைபெற்ற வார காய்கறி சந்தையில் கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகளையும் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்தனர்.பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.

News April 30, 2024

கடலூர்:மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் செய்த செயல்

image

புதுச்சேரி மரப்பாலம் திருப்பூர் குமரன் நகரை சேர்ந்த முனுசாமி தீபா இவர்களின் மகன் கணேஷ் (10) வயதுள்ள சிறுவன் வீட்டில் கோபித்துக் கொண்டு சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகே பேருந்தில் நின்று கொண்டிருந்தார்.மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சின்னையன் அடைத்து பேசி யார் என விசாரித்து புதுச்சேரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தார்.இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

News April 30, 2024

விழுப்புரம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

பெரம்பலூர் அருகே தோராட்டம்!

image

பெரம்பலூர் எசனை ஸ்ரீகாட்டு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்றது. இதில் அக்னி சட்டி மற்றும் அழகு குத்துதல் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், இன்று(30ஆம் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மன் அருள் பெற்று எசனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

News April 30, 2024

ராம்நாடு: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

பைக் மீது கார் மோதியத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

கனியாமூர் அருகே இன்று காலை வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த கார் டயர் வெடித்ததில் கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆனந்த் என்பவருக்கு கால் குறைவு ஏற்பட்ட நிலையில் விஜய் என்பவர் இந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 30, 2024

அரக்கோணம் அருகே 2 ஜோடிகளுக்கு திருமணம்

image

அரக்கோணத்தில் தனியார் அமைப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஏழை ஜோடிகளான சக்திவேல் – சங்கவி, தர்மன் – ரேவதி ஆகிய இரு ஜோடிகளுக்கு நேற்று(ஏப்.29) மாலை அரக்கோணம் ஜவகர் நகரில் உள்ள அருள் குழந்தைகள் இல்லத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தில் மும்மதத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

News April 30, 2024

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

சிவகாசி மக்களை குளிர்வித்த சாரல் மழை

image

சிவகாசியில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பெய்த சாரல் மழையால் பூமி நன்கு குளிர்ந்து இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கத்தில் இருந்து வந்த மக்களுக்கு நேற்று பெய்த சாரல் மழை சற்று குளிர்ச்சியை தந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!