Tamilnadu

News April 30, 2024

நெல்லை: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

திருவள்ளூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

நீலகிரியில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

image

நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தாக்கத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தோட்டங்களில் பயிரிட்டுள்ள காய்கறிகள் தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து
அவரை ரூ.180, பீன்ஸ் ரூ.200, கேரட் ரூ.80, ப்ரக்கோலி ரூ.240
விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

News April 30, 2024

திருச்சி:பயணிகள் வசதிக்காக ரயில் பெட்டிகளில் நவீனம்.

image

திருச்சி பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி பக்தி கோதி ரயில் பெட்டிகள் நவீன மயமாக்கப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் எண் 22 673 சூப்பர் பாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஏப் 29ஆம் தேதி முதல். ரயில் பெட்டிகளில் படுக்கை வசதிகள் .ரயில் செல்லும் வேகம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் இருக்கைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று தென்னக ரயில்வே நேற்று அறிவித்தது.

News April 30, 2024

சேலம்: குண்டு மல்லி விலை சரிவு

image

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலம் கடைவீதியில் உள்ள பூ மாரக்கெட்டுக்கு பூக்களை கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை சரிந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் கிலோ ரூ.360க்கு விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.80 குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்பட்டது.

News April 30, 2024

புதுக்கோட்டை:நாளை மதுபானக் கடைகளுக்கு விடுமுறை!

image

உலக தொழிலாளர் தினமான
நாளை மே 1 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அன்னிய மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு(பார்) விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

பாலக்கோடு: கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பணந்தோப்பு கிராமத்தில் நேற்று(ஏப்.29) ஜெய்கிருஷ்ணன் என்பவரது விவசாய கிணற்றில் கறவை மாடு தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு கிணற்றில் இறங்கி கயிறு மூலம் கறவைமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

News April 30, 2024

நாமக்கல் அருகே காவல் துறை குறைதீா் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா பரிந்துரையின்படி ப.வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி தலைமையில் பொதுமக்கள் குறை தீா்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. ப.வேலூா் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து முகாமில் 15 புகாா் மனுக்கள் பெறப்பட்டு அதில் 13 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது.

News April 30, 2024

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறை

image

வேலூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நாளை (மே 1) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல் 29) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் இன்று கரண்ட் கட்!

image

கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் இன்று(ஏப்.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லை கங்கா நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நங்கநல்லூரின் ஒரு பகுதி, தில்லை கங்கா நகர், பழவந்தாங்கல், ஜீவன் நகர், ஆதம்பாக்கம் ஆண்டாள் நகர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் மின்தடை ஏற்படும். வெயில் காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.

error: Content is protected !!