India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று(ஏப். 30) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை அடையாறு பகுதி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், கொட்டிவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
ஆந்திர மாநிலத்தில் மே.13, கா்நாடகத்தில் மே.7 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் தொழிற்சாலை, வா்த்தக நிறுவனங்கள், கடைகள், தோட்டங்களில் பணியாற்றும் ஆந்திரா, கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தோ்தலில் வாக்களிக்க தொழில் நிறுவனங்கள், தோட்ட உரிமையாளா்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு வைப்பறைகளில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் ஆளில்லா விமானங்கள் (Drones) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நாளை (01.05.2024) “மே தினத்தை” முன்னிட்டு, உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை உள்ளிட்ட அனைத்து வகை மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூடப்பட்டு இருக்கும் எனஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மேலும் மது விற்பனை தொடர்பான விதிமீறல்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இதற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in தளத்தில் மே 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி லாரிகளில் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப்படும்போது சாலையில் நிலக்கரி துகள்கள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் காரைக்கால் வழியாக நிலக்கரி ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு காரைக்கால் போக்குவரத்து காவல்துறை சார்பில் நேரக் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. இதில் காலை 7 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 9 மணி வரை இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
திருவாரூர் மாலட்டம் கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பொதக்குடி சேகரை காந்திகாலனி மிளகுகுளம் பூதமங்கலம் தண்ணீர்குன்னம் லெட்சுமாங்குடி வடகோவனூர் உள்பட பல பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நேற்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் கோடை வெயிலில் வாடும் பொதுமக்கள் இந்த மின்வெட்டுக்கு ஓட்டு போட்டோம் என புலம்பி வருகின்றனர்.
குமரி மாவட்டம் தெள்ளாந்தியை சேர்ந்தவர் ஜெர்ஷின்(19), நர்சிங் மாணவர். நேற்று ஜெர்ஷினும், அவரது நண்பர் சேம் பிரிட்டோவும் கோட்டாரில் நின்றபோது வட்டவிளையை சேர்ந்த ஜினோ(20) ஜெர்ஷினுடன் தகராறு செய்து பைக் சாவியால் அவரை குத்தியுள்ளார். கோட்டார் போலீஸ் விசாரணையில், சேம் பிரிட்டோவும், ஜினோவும் ஒரே பெண்ணை ஒருதலையாக காதலித்ததும், இந்த தகராறில் கைகலப்பானதும் தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், சங்கர நேத்ராலயா, யங் இந்தியன்ஸ் ஆகியவை இணைந்து, ஓரிக்கை பாரதிதாசன் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக ‘இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம்’ நடைபெற்று வருகிறது. இந்த முகாம் இன்று(ஏப்.30) மதியம் 1 மணியுடன் நிறைவு பெறுகிறது. சிறப்பு வசதிகள் கொண்ட பேருந்து அறுவை சிகிச்சை செய்யப்படுவதும் நாளையுடன் முடிவடைகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டில்(2023-24) தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டிய 100 ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 1216 கோடி வருவாய் ஈட்டி முதலாவது இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும், 564 கோடி வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்தில் எழும்பூர் ரயில் நிலையமும், 325 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி மூன்றாவது இடத்தை கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது என்று ரயில்வே துறை அதிகாரிகள் இன்று கூறினர்.
Sorry, no posts matched your criteria.