Tamilnadu

News April 30, 2024

மாவட்டம் முழுவதும் 267 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 29)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 267 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இன்று ஒரே நாளில் 15 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ‌இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

நாகை: மீனவர்கள் மீது தாக்குதல்

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பகுதியில் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் நான்கு மீனவர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது கடலில் வந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் முருகனை கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மீனவர்கள் கரை திரும்பியவுடன் அரசு மருத்துவ கல்லூரியில்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News April 30, 2024

குமரியில் இதற்கு தடை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைதேர்தலில் வாக்குபதிவு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோணம் அரசு கல்லூரியினை சுற்றி பாதுகாப்பினை கருதி 2 கி.மீ சுற்றளவிற்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. மேலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரீதர் (இ.ஆ.ப ) தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

200 ஆடுகள் தயாராகும் மெகா கறி விருந்து 

image

பழனி அருகே பெரியதுரையான் கருப்பணசாமி கோவிலில் 43 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய 200 ஆடுகள் இன்று பூஜை செய்யப்பட்டு கருப்பணசாமி முன்பு பலி கொடுக்கப்பட்டது. தற்போது ஆயிரம் கிலோ ஆட்டுக்கறியுடன் அன்னதானம் வாங்க உணவு தயாராகி வருகிறது. இன்று காலை 10 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

திமுகவினரின் கோரிக்கையை கேட்ட அமைச்சர்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா மறவக்காடு ஊராட்சி சித்தேரி கிராமத்தில் உள்ள திமுக கிளை நிர்வாகிகளின் வீட்டிற்கு நேற்று தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா நேரில் சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் நிகழ்ச்சியில் மன்னார்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சித்தேரி சிவா உள்பட திமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News April 30, 2024

இன்று முதல் அதிரடி தடை

image

நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளை சுற்றி
ஒரு கி.மீ. தொலைவிற்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்தும், தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

News April 30, 2024

முள்ளம்பன்றியை வேட்டையாடிய 2 போ் கைது

image

திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழையபாளையம் கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி (55), திருப்பதி (45) ஆகியோா் உரிமம் இல்லாத துப்பாக்கியை பயன்படுத்தி முள்ளம்பன்றியை கொன்று சமைத்து கொண்டிருப்பதை பாா்த்த வனத்துறையினா் அவா்களைப் பிடித்து வனஉயிரின குற்ற வழக்கு பதிவு செய்து திருப்பத்தூா் சிறையில் அடைத்தனா்.

News April 30, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

நெல்லை வடக்கு சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ராஜுவ். இன்ஜினியர் ஆன இவர் நேற்று கயத்தாறுக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கருப்பசாமி என்பவர் உடன் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது கயத்தாறு சாலையில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராஜுவ் பலத்த காயங்களுடன்  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 30, 2024

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டையில் உள்ள ராதா நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி பூங்கா, நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் துணை இயக்குனர் பரணிதரன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

News April 30, 2024

வேலூர்: டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த 15 பேர் கைது

image

வேலூர் அடுத்த பெருமுகை டாஸ்மாக் மதுக்கடை பார் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி போதை ஆசாமிகளால் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அலமேலு மங்காபுரத்தை 15 பேரை கைது செய்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!