India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதாச்சலம் பகுதியில் விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று முதல் இளநீர் விலை திடீர் உயர்வு, வெயிலின் தாக்கத்தால், கோடை காலத்தில் உடலின் உஷ்ணத்தை தணிக்க, இளநீரை விரும்பி அருந்துகின்றனர். ரூ. 25 முதல் ரூ.40 வரை விற்பனையான நிலையில், தற்போது 30 முதல் 50 வரை விற்கப்படுகிறது. விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி அருந்துகின்றனர்.
சிவகாசியில் முதன் முறையாக பர்னிச்சர் எக்ஸ்போ 2024 நடைபெற உள்ளது. விருதுநகர் பைபாஸ் சாலையில் உள்ள கம்மவார் திருமண மஹாலில் மே 3 முதல் மே 12 வரை 10 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அனுமதி இலவசம் என்பதால் அனைத்து பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்டுள்ளது . இதில் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் பல்வேறு புதிய வகையில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
2024-2025 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையம் (ம) சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதால் தகுதியுடைய மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தேர்வு மே 10, 11ம் தேதிகளில் பெரம்பலூரில் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. விடுதியில் மாணவர்கள் சேர்வதற்கு மே 8ம் தேதி வரை www.sdat.tn.gov.in விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 410 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக அதிகரித்து உள்ளது. முட்டை கோழி கிலோ ரூ.90 ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.124 ஆகவும் விற்பனையாகின்றது .
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் காழியப்பநல்லூர் சிங்காநோடை தில்லையாடி அனந்தமங்கலம் மாமா குடி கிடங்கள் காலகஸ்திநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெயிலின் தாக்கத்தினால் மா சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது இலைகள் உதிர்ந்து செடி பாதிப்பு.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரித்து வழங்கும் பணியில் திருச்சி மாவட்ட 3 கூட்டுறவு சங்கங்களில் உள்ள பெண் தையல் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு சீருடை தயாரிக்கும் பணியை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்குவதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை மாவட்டத்தில் செயல்படும் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை முன்பதிவு நேற்று(ஏப்.29) தொடங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 044 – 25360041 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்காண கோடை கால இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 2 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் குறும்பட பயிற்சி, கதை எழுதுதல் பயிற்சி, நாடக பயிற்சி, ஓவிய பயிற்சி, ஒயிலாட்டம், சதுரங்க போட்டி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்க உள்ளது. பயிற்சி நிறைவு செய்யும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் தயாரித்து வழங்கும் பணியில் திருச்சி மாவட்ட 3 கூட்டுறவு சங்கங்களில் உள்ள பெண் தையல் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு சீருடை தயாரிக்கும் பணியை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்குவதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
Sorry, no posts matched your criteria.