Tamilnadu

News April 30, 2024

சென்னை ரயில், காட்பாடி வரை மட்டுமே செல்லும்

image

கோவையிலிருந்து ஏப்.30ம் தேதி காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் சென்னை செல்லாமல் காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில், அதே நாளில் சென்ட்ரலுக்கு பதிலாக காட்பாடியிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கோவை வந்தடையும் என இன்று (ஏப்ரல்.30) சேலம் கோட்ட ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

News April 30, 2024

அமைச்சர் தலைமையில் பணி ஓய்வு பாராட்டு விழா

image

அறந்தாங்கி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தங்களுக்காக அயராது உழைத்த இல்லம் கல்வி அறந்தாங்கி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் எம் கணேசன்க்கு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவை அறந்தாங்கி ஒன்றியத்தின் தன்னார்வலர் பௌலின் நீதி அவர்களின் முன்னேற்பாட்டோடு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

News April 30, 2024

பேருந்து, லாரி மோதியதில் 14 பேர் காயம்

image

திருப்பத்தூர் பள்ளிப்பட்டு பகுதியில் இன்று தருமபுரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. லாரி மற்றும் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 30, 2024

நீலகிரி ஆட்சியர் அருணா அறிவிப்பு

image

தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகாண பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஊட்டி நகராட்சியை பொருத்தமட்டில் மே இறுதிவரை சமாளிக்கக்கூடிய அளவுக்கு அணைகளில் நீர் இருப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் வாரம் ஒருமுறை நீர் விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. அதுவும் கூடிய விரைவில் சரிசெய்யப்படும். தவிர தேவைப்படும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படும் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்தார்.

News April 30, 2024

திருவள்ளூர்: போதை இளைஞர்கள் அட்டகாசம்

image

மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ மூன்றாவது தெருவில் நேற்று மதியம் மதுபோதையில் வந்த 8-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை கல்லால் அடித்து பொதுமக்களை அச்சுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

News April 30, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்பி ஆய்வு

image

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் பொள்ளாச்சியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று கோவை
எஸ்பி பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, அதிகாரிகள், திமுக, அதிமுக, பாஜக கட்சியின் முகவர்கள் இருந்தனர்.

News April 30, 2024

நெல்லை நகரில் போக்குவரத்து முடக்கம்

image

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இன்று (ஏப்.30) காலை ஒரு லாரி திடீரென பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நெல்லை தென்காசி மார்க்கத்தில் இருவழியிலும் செல்லும் வாகனங்கள் சுமார் 5 கிமீ தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. அதன்பின் அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நெல்லை நகரில் போக்குவரத்து முடங்கியது.

News April 30, 2024

வேலூர்: டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த 15 பேர் கைது

image

வேலூர் அடுத்த பெருமுகை டாஸ்மாக் மதுக்கடை பார் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி போதை ஆசாமிகளால் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அலமேலு மங்காபுரத்தை 15 பேரை கைது செய்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 30, 2024

ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்ததால் போராட்டம்

image

கடலாடி ராசிகுளம் பகுதியை சேர்ந்தவர் கனகவல்லி (24). கர்ப்பிணியான இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு ஆண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று திடீரென இறந்தது. சிகிச்சை குறைபாடு எனக்கூறி உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் உடலை பெற்று சென்றனர்.

News April 30, 2024

கிருஷ்ணகிரி: வாகனத்தில் அடிபட்ட புள்ளி மான்

image

ராயக்கோட்டை அருகே உள்ள சின்னதப்பை, மதகேரி பகுதியிலுள்ள மலை மற்றும் காடுகளில் வன விலங்குகள் உள்ளன. இவ்வாறாக இருந்த புள்ளிமான் இரை மற்றும் தண்ணீர் தேடி இன்று காலை சின்னதப்பை கிராம பகுதிக்கு வந்துள்ளது. அப்போது வாகனம் மோதியதில் படுகாயமடைந்து எழ முடியாமல் உள்ளது. அதை அப்பகுதி மக்கள் கட்டிவைத்துள்ளனர். எனவே வனத்துறையினர் மானை மீட்டு சிசிச்சையளிக்கும்படி வலியுறுத்துகின்றனர்.

error: Content is protected !!