India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி கடற்பகுதியில் நெகிழி போத்தல்கள் மற்றும் மணல் மூட்டை கட்டி அதில் சவுக்கை போன்ற மரங்களின் கிளைகளை கொண்டு கடல் பகுதியில் இறக்கிவிட்டு அதன் மீது ஹூக்கான் (எ) அக்டி முறையில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறையில் மீன்பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி அரசின் மீன்வளத்துறை சார்பில் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று குமரி மாவட்டத்தில் மழை பெய்தது. கன்னியாகுமரியின் மழைபொழிவு அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தக்கலையில் 5 செ.மீட்டரும், கோழிப்போர்விளை, சுருளக்கோடு ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், குழித்துறை, முள்ளங்கான விளை ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், சித்தார், சிவலோகம், திருப்பரப்பு, பெருஞ்சாணி அணை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் பதிவானது.
ஆரோவில் அடுத்த குயிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (39). பிரபல ரவுடியான இவர் மீது 9 கொலை வழக்கு உள்ளிட்ட 24 வழக்குகள் உள்ளன. பாளையங்கோட்டை சிறையிலிருந்து கடந்த மாதம் வெளியே வந்த ரவுடிராஜ்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நேற்று ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் விசாரணைக்காக அழைத்தபோது அவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
வேலூர் மாநகராட்சியில் 2017ம் ஆண்டு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முன்னாள் வேலூர் மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நேற்று (ஏப்ரல் 29) உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரியில், ஊரக வளர்ச்சிதுறை சார்பில் நடைபெற்றுவரும் திட்ட பணிகள் மற்றும் சீரான குடிநீர் விநியோக பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாளை அருகே மேலபாட்டத்தை சேர்ந்த மாரியப்பன் (56) என்பவரது மகள் முத்துப்பேச்சி (36). இவருக்கும், நடுவக்குறிச்சி கொம்பையாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் முத்துப்பேச்சி வேறொரு நபருடன் தகாத உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்து அவரது தந்தை மாரியப்பன் நேற்று (ஏப்.29) வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் முத்துப்பேச்சியின் தலையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். மாரியப்பனை போலீசார் கைதுசெய்தனர்.
மாதவரம் தபால் பெட்டி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மதியம் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் கோடை வெப்பம் தாளாமல் திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு சாலையோரம் கொண்டு வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
கோடை காலத்தில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக சேலத்தில் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. மண் பானை தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. பானை ரூ.200 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. பைப் பொருத்தப்பட்ட மண்பானை ரூ.300 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள், வியாபாரிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
திருப்பத்தூரில் ஏலகிரி மலையில் அமைந்துள்ளது செய்கையாக உருவாக்கப்பட்ட புங்கனூர் ஏரி. பூங்காவை ஒட்டி உருவாக்கப்பட்ட இந்த ஏரி 25 அடி ஆழமும் 60 சகிமீ நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. இந்த எரியில் இங்குள்ள படகு கிளப், பெடல் மற்றும் மோட்டார் படகு சவாரிகளை வழங்குகிறது. மேலும் ஒரு மரத்தின் மீது வீயூவ் பாயிண்டும் உள்ளது. மேலும் நடைபாதை, நீர்வீழ்ச்சி, உயிரியல் பூங்காவும் அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.