India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, இந்த ஆண்டு அரசு பொருட்காட்சியானது கோவை மாநகராட்சி, வ.உசி மைதானத்தில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட்டு, 45நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
ஜெயமங்களம் போலீசாரால் கடந்த 2018-ம் ஆண்டு சங்கீதா என்பவரை கொலை செய்த வழக்கில் சங்கீதாவின் கணவர் மலைச்சாமி, மாமனார் ராமன், மாமியார் செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணை தேனி மாவட்டம் மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பாக குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க பொருளாளராக இளையராஜா என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீர் வழங்கப்படுவதை துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிபடுத்த வேண்டும். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
அந்தியூர் வட்டம், மைக்கேல்பாளையம் ஊராட்சித் தலைவர் சரவணன் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 2,500 மரங்களை நட்டு கிராமம் முழுவதும் பராமரித்து வருகிறார். கடுமையான கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் , பசுமையாகவும் காட்சியளிக்கிறது. மைக்கேல்பாளையம் ஊராட்சி பகுதி பொதுமக்கள் ஊராட்சி தலைவரை வெகுவாக பாராட்டினர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவியர் சேர்வதற்கான தேர்வுக்கு தகுதியான மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 95140- 00777 என்ற எண்ணிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேரிலும் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
கோவை, காரமடை ஒன்றியம், சிக்காரம்பாளையம் ஊராட்சி சென்னி வீரம்பாளையத்தில் உள்ள சிப்ஸ் கம்பெனியில் அம்மோனியா வாயு கசிவினால் நேற்று விபத்து ஏற்பட்டது. அதனை மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் காரமடை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.சுரேந்திரன் ஆய்வு மேற்கொண்டு மேலும் அவ்வூரில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மதிய உணவு வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
திருச்சி நியாய விலை கடையில் மது அருந்திவிட்டு ரேஷன் பொருட்கள் வாங்க வந்த சசிகலா பெண்ணை தரக்குறைவாக பேசி,ரேஷன் கார்டை வீசி எறிந்த ஊழியர் நிஸாரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்.இந்நிலையில் இன்று கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் துணைப்பதிவாளர் ராஜகுமார் ரேஷன் கடை ஊழியர் நிஸாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
உழைக்கும் மக்களின் பெருமையையும் தியாகத்தையும் உலகத்திற்கு பறைசாற்றும் இந்த சர்வதேச உழைப்பாளர் தினத்தில் உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பாளர்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலையிலும் புதுச்சேரி அரசு துணை நிற்கும் என்று புதுச்சேரி ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.