India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முட்டை மற்றும் கோழி உற்பத்தி செய்யும் மாவட்டங்களான சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் காரணமாகவும், கேரளாவில் பரவி வரும் பறவை நோய் காரணமாகவும், முட்டையின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், மதுரையில், ஒரு முட்டை, மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டதால் மக்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கி சென்றனர்.
மதுரையை சேர்ந்த 55 வயது பெண் சுமார் 15 வருடங்களாக கழுத்தில் தைராய்டு கட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 10ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். அவருக்கு பொது அறுவை சிகிச்சைத்துறை குழு மூலம் ஆபரேஷன் செய்து வெற்றிகரமாக அந்தக் கட்டியை நேற்று அகற்றினர். சுமார் 3.5 லட்சம் செலவிலான இந்த அறுவை சிகிச்சை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது. இது தொடர்பாக கோவில் ஸ்தானிகர் சீனிவாச ஐயங்கார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் சீனிவாச ஐயங்கார் மாவட்ட கோர்ட்டில் 2வது முறையாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நேற்று வந்த போது நீதிபதி குமரகுரு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குறப்பாளையம் பிரிவு சாலையில் வேன் மீது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுசீந்திரன், பழனிச்சாமி, விமலா, ஸ்ரீவித்யா ராமாயி புவனேஸ்வரி ஆக 7 பேரும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். திருக்கடையூரில் உள்ள உறவினரின் 60-வது திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே பால்பண்ணைக்கு செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டு இருப்பதை சரிசெய்யப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி துணை மேயர் மு. லியாகத் அலி பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஆணையர் ஷியாமளா, காவல்துறை ஆய்வாளர் பாலசுப்ரமணியன், மேஸ்திரி முத்து, மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் விருதுநகர் மாவட்டத்தில் 15 நாட்கள் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு ஏப் 29ஆம் தேதி முதல் மே 13 வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
பென்னாகரம் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று(ஏப்.30) மாலை தன பைக்கில் வண்ணாத்திப்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த பைக் மோதி தூக்கி வீசப்பட்டு, பின்னால் வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் சிவில் நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த வகையில் திருச்சி மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு இன்று முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் மகளிர் நீதிமன்றம், கூடுதல் மகளிர் நீதிமன்றம், பி சி ஆர் நீதிமன்றம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றம் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நேற்று(ஏப்.30) நடந்தது. இதை முன்னிட்டு சாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில் ராஜபாளையம் தெருவில் உள்ள நவநீதகிருஷ்ணன் மடம் சார்பில் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு பட்டு சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாக ஏராளமான தெரு நாய்கள் சாலையோரங்களில் கூட்டமாக வலம் வருகின்றன. இவற்றில் சில சாலையோரம் செல்லும் பொதுமக்களை கடிக்கின்றன. இந்நிலையில் நேற்று(மே 1) ஒரே நாளில் 3 இடங்களில் 10க்கும் பேரை நாய்கள் கடித்து குதறியது. இதில் ராஜஸ்தானில் இருந்து சுற்றுலா வந்த 3 பேரும் அடக்கம். எனவே இதனை கட்டுப்படுத்த பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.