India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்ஷனாவின் 3வது சாதனை நிகழ்வாக ஓராண்டு உழைப்பால் தாம்பூலத்தில் உருவாக்கிய ஓவியங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து நேற்று (ஏப்ரல் 30) மாலை நடைபெற்றது. சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சௌந்தர மகாதேவன் இந்த கண்காட்சியினை பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
தமிழக கேரளா எல்லை பகுதியில் அதிரடிப்படையினர் முகாமிட்டு நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பகல் 11 மணிக்கு வனப்பகுதிக்குள் சென்ற தண்டர்போஸ்ட் போலீசார் மற்றும் நக்சல் இடையே 9 முறை துப்பாக்கி சூடு சண்டை நடந்துள்ளது. இது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இது அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கை, கால்கள் மருத்துவமனையிலேயே தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே செயற்கை கை, கால்கள் தேவைப்படுவோர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரசு மருத்துவமனையை அணுகி பதிவுசெய்யலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்.30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதுவை- குமுளி வழித்தடத்தில் இயக்கப்படும் பழைய பஸ்சுக்கு பதிலாக, புதிய பிஆர்டிசி பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, தேனி வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு குமுளி சென்றடைகிறது. புதுவையில் இருந்து குமுளிக்கு முன்பதிவுடன் சேர்த்து பஸ் டிக்கெட் கட்டணமாக ரூ.450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் சபீர் காசிம், (32). இவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணியை துவங்க ஒப்புதல் கேட்டு நீர்வளத்துறை பாசன உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன்(47), ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரை அணுகியபோது 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை அறிவுரையின்படி நேற்று இருவரிடமும் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியபோது இருவரையும் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்தது.
உழைப்பாளர் தினத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று (மே 1) மட்டும் அனைவருக்கும், வெறும் 1 ரூபாய்க்கு மசாலா டீ வழங்குகிறது மதுரையில் உள்ள நைனாஸ் டீக்கடை.
கடையின் நிறுவனர் கூறுகையில், “ கடந்த மூன்று ஆண்டுகளாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு, 1 ரூபாய்க்கு தேநீரை வழங்கி வருகிறோம்” என்றார்.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நெல்லை டவுன் அனைத்து மகளிர் ஸ்டேஷன் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் நாகராஜை நேற்று (ஏப்.30) கைது செய்தனர். இதனால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் போக்சோ சட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புளியாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (45). இவர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு, வீடு புகுந்து திருடுவது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை போலீசார் தனிப்படை அமைத்து, பல இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று மத்தூர் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுபவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 18005995950 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவித்தவர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.