India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவட்டார் மின் விநியோகத்துக்கு உட்பட்ட அருமனை பீடர் கீழ் வரும் தேமானூர், தோட்டவாரம், மூவாற்றுமுகம் சுற்றுவட்டார கிராமங்களில், நாளை(மே 2) மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குலசேகரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கஞ்சா, கஞ்சா சாக்லெட், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 23ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலான 7 நாளில் கஞ்சா கடத்திய 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குறைந்த கட்டணத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் ரூ.1500. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
ஐஎன்டியுசி தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள்
தொழிற்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சி 5 ஆவது பிரிவில் இன்று மே.1 தொழிலாளர் தினம் கொண்டாடபட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் வீ.காளிராஜ், மாவட்ட தலைவர் A.பக்ருதீன் உள்ளிட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினர்.
காரமடை, சென்னிவீரம் பாளையத்தில் சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமோனியா கசிவால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து வடக்கு ஆர். டி.ஓ.கோவிந்தன், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் ஆகியோர் அமோனியா காஸ் கசிந்த இடத்தில் ஆய்வு செய்த பின் சுமார் 300 கிலோ, அமோனியா காஸ் வேறு ஒரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று (ஏப்.30) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் ஆம்பூர் காங்கிரத்தியா பகுதியை சேர்ந்த லோகேஷ் (24), பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (22), வாத்தி மனை பகுதியை சேர்ந்த முஜிபுர் அகமது (24) ஆகிய 3 கஞ்சா மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே-2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ பாண்டவர்மங்கலம், சண்முக சிகாமணிநகர், ராஜிவ்நகர், சுப்பிரமணியபுரம், ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் மே 12ஆம் தேதி அக்னி நட்சத்திர மஹா அபிஷேக விழா நடைபெற உள்ளது. முன்னதாக 11ஆம் தேதி சென்னிமலை மாரியம்மன் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் குடம் புறப்படுகிறது. பின்னர் மே 12 ஆம் தேதி அக்னி நட்சத்திர விழா நடைபெறுகிறது.
தேவிபட்டினம் முகமது பிலால் தன் வீட்டின் மேல் செல்லும் மின்கம்பியை மாற்றியமைக்க மின்வாரிய அலுவலகத்தில் பணம் கட்டி மனு அளித்தார். இதற்கு வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு, வயர்மேன் கந்தசாமி, உதவி மின் பொறியாளர் செல்வி ஆகியோர் ரூ.9000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதை தொடர்ந்து ரமேஷ் பாபு, செல்வி, கந்தசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் இருந்து வியாசர்பாடி செல்லும் சாலையில் கல்லூரி மாணவர் விஷ்வா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாநகரப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே விஷ்வா பலியானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மாநகரப் பேருந்து ஓட்டுநர் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.