India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் பகுதியில் உள்ள,இ. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எட்டாம் ஆண்டு விழா நேற்று (ஏப்ரல் 30) முதல்வர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் வேல்முருகன் வரவேற்றினார், சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கிய பள்ளித் துறை தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு, அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலத்தில் மதுரையில் சீரான முறையில் குடிநீர் வினியோகத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் ஆனந்த் மோகன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு மற்றும் குடிநீர் வழங்கும் பகுதியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பது குறித்து நேற்று ஆய்வு நடத்திய ஆனந்த் மோகன் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சி சிங்கா நோடை காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு காய்கறி சாகுபடிகள் செய்துள்ளனர்.கத்தரி,வெண்டை,புடலை,பீர்க்கங்காய்,கொத்தவரங்காய்,மிளகாய்,பாகற்காய் என பல வகை காய்கறிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் செடிகள் இலைகள் உதிர்ந்து கருகும் அபாயம்.
கடலூர் மத்திய சிறையில் விசாரணை (ம) தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தலைமை காவலர், மோப்ப நாயுடன் சிறை வளாகத்தில் சோதனை ஈடுபட்டனர். அப்போது சிறை பள்ளிக்கு பின்புறம் மரத்தின்கீழ் 20 கிராம் கஞ்சா பொட்டலமாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
தென்காசி மாவட்டத்தில் மே, ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இருந்தால் பொதுமக்கள் அதற்கான கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633 295891 மற்றும் 8148230 265 என்று தொலைபேசி எண்களிலும், சுகாதார குறைபாட்டிற்கு 96 00212 764 என்ற எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தை பொருத்தவரை அனல் காற்றோடு வீசிய கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் சூட்டை தணிப்பதற்காக பொதுமக்கள் இளநீர் நுங்கு உள்ளிட்டவற்றை அதிக அளவில் பருக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாகை மாவட்டத்தில் போதிய அளவில் இளநீர் இல்லாததால் காரணத்தால் அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதன் வரத்து குறைவு காரணமாக இளநீர் ஒன்று ரூ 30-45 வரை விற்கப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று(ஏப்.30) தொடங்கியது. ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகளப் போட்டிக்கு பயிற்சி, வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குத்துச்சண்டை பயிற்சி மற்றும் கையுந்து பந்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
திருத்தணி மிட்டக்கண்டிகையைச் சேர்ந்தவர் ரகுகுமார். இவர் தனது உறவினர் ராமதாஸ் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அரக்கோணம் காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை பள்ளூர் பருவமேடு அருகே இன்று மாலை செல்லும் போது காரில் இருந்து புகை வந்ததால் இருவரும் கீழே இறங்கினர். அடுத்த சில நொடிகளில் கார் தீ பற்றி எரிந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் காவேரி காம்ப்ளக்ஸ் அருகே சென்னை மார்க்கெட் புதுச்சேரி உழவர்கரை பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் சாலையை கடக்க முயன்ற போது ஏப்ரல்.29 இரவு 11 மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தொடர்பாக போலீசார் நேற்று(ஏப்.30) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.