India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சித்தோடு அடுத்த நரிப்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நேற்று 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நரிப்பள்ளம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு 15-35 வயதுடைய ஆண், பெண் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம். 2023 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை செய்த சேவைகள் தகுதியாக ஏற்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். இன்றுமுதல் மே 15 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் www.sdat.tn.gov.in என்ற வலைதளத்தில் சென்று விண்ணப்பக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.
கோவை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கோவை அரசு இசை கல்லூரியில் செயல்படும் ஜவஹா் சிறுவா் மன்றத்தில் கோடை விடுமுறையையொட்டி மே 1 முதல் 10 ஆம் தேதி வரை காலை 10 முதல் 1 மணி வரை பரதநாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் தொடா்பான பயிற்சிகள் இன்று முதல் அளிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு 97515 – 28188 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் சத்திய சிவன் கூறுகையில், நீலகிரியில் தற்போது வெப்பம் அதிகரித்த நிலையில் இங்குள்ள அணைகள் வறண்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வரும்போது குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் இ-பாஸ் நடைமுறையால் குடிநீர் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும் என்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் பல்வேறு பகுதிகளில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு 9,900 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யாமல் தேங்கியுள்ளது. தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேஷன் கார்டு இன்றியமையாததாக உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்கு கார்டு தேவைப்படுகிறது. எனவே புதிய ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு இன்று மனு அனுப்பி உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், புதிய நீதி கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி.சண்முகம் இன்று (மே 1) உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உடலால் உழைப்பை உருவாக்கி உழைப்பால் இவ்வுலகை இயக்கிக் கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, பணி நேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடித்தல், தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை பருகவேண்டும். மேலும் அதிக அளவில் மோர், கூழ், இளநீர், எலுமிச்சைபழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவுரையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷரவன்குமார் வழங்கினார்.
தளி போலீசார் பீலாளம் சாலை பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று (ஏப்ரல் 30) ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்கள் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததும், வீடு புகுந்த கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை 16 இடங்களில் போக்குவரத்து பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாதது, 3 பேர் பயணிப்பது, போக்குவரத்து விதிமுறைகள் மீறல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென ஆட்சியர் சாருஸ்ரீ இன்று தெரிவித்துள்ளார். முறையற்ற குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் குழாய்களில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் பொதுமக்களின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.