Tamilnadu

News May 1, 2024

மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

image

மன்னார்குடியில் கோபாலசமுத்திரம் வடக்கு வீதியில் வசிக்கும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் இரா. காமராஜ் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை வருகை தந்தார். காமராஜ் அவரை வரவேற்று உபசரித்தார். நிகழ்வில் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் மற்றும் கழக நிர்வாகிகள் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

News May 1, 2024

மானாமதுரை தனியார் பள்ளியில் கேக் வெட்டி மே தின கொண்டாட்டம்

image

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின கொண்டாட்டம் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். மற்றும் பள்ளியின் தாளாளர் கபிலன் பள்ளியின் ஆட்சியர் மீனாட்சி முன்னிலை வகித்தனர். பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா ஏற்பாடு செய்தார்.

News May 1, 2024

திருப்பத்தூர்: நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு

image

திருப்பத்தூர் மாவட்டம் வழுதலம்பட்டு கிராமத்தில் நிலத்தகராறில் முதியவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பத் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் முதியவரின் உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட சம்பத்தை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

News May 1, 2024

கோவை: கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிறதா என ஆய்வு

image

கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இன்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் இன்று ஆய்வு செய்தார். அப்போது கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என அங்கிருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார்.

News May 1, 2024

மே தின உறுதிமொழி எடுத்த தொழிலாளர்கள்

image

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் தொழிலாளர்கள் மே தின உறுதிமொழி எடுத்தனர். பேட்டை சுத்தமல்லி விலக்கில் ஜனநாயக சுமை தூக்கும் தொழிலாளர் இன்று (மே.1) மே தினம் கொண்டாடினர். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர் சங்க செயலாளர் முத்துக்குமார் தலைமையில் மே தின உறுதி ஏற்பு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், துணைத் தலைவர்கள் அன்புச்செல்வி செல்வம் உட்பட 13 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

News May 1, 2024

புதுவையில் பொலிவிழந்த கடற்கரை சாலை காந்தி சிலை!

image

புதுச்சேரியில் பல அழகிய இடங்கள் அமைந்துள்ளன.பழங்கால நினைவு சின்னங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. குறிப்பாக புதுச்சேரி கடற்கரையையொட்டி பல நினைவு சின்னங்கள் அமைந்துள்ளன. தற்போது காந்தி சிலையும், அதனைச் சுற்றியுள்ள கல் தூண்களும் சுத்தமின்றி, பொலிவிழந்த நிலையில் காட்சியளிக்கின்றன. காந்தி சிலையின் முகத்துக்கு நேராக அமைக்கப்பட்டுள்ள இரண்டு எல்இடி மின்விளக்குகள் மட்டுமே எரிகின்றன

News May 1, 2024

அரசு சார்பில் சிறுமிக்கு வீடு கட்டும் பணி: எம்எல்ஏ ஆய்வு

image

ஆவடி அருகே மோரையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் குணமடைந்தார். இவருக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டு, வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியை ஆவடி தொகுதி எம்எல்ஏ சா.மு.நாசர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News May 1, 2024

விழுப்புரம் ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பழனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

News May 1, 2024

ஜூலையில் இடம் மாறும் பிராட்வே பேருந்து நிலையம்

image

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் வரும் ஜூலை மாதத்தில் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது குறித்து நேற்று தகவல் வெளியான நிலையில் இன்று(மே 1) உறுதியாகியுள்ளது. மேலும், அவ்விடத்தில் ரூ.823 கோடியில் போக்குவரத்து முனையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

அரக்கோணம் அருகே ரயில் மீது கல்வீச்சு

image

தானாபூரிலிருந்து பெரம்பூர், அரக்கோணம் வழியாக பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று(ஏப்.30) இரவு அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏ-2 ஏசி கோச் கழிவறை கண்ணாடி மீது கல் வீசப்பட்டது. இதுகுறித்து கழிவறைக்கு சென்ற பயணி ஒருவர் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தார். அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

error: Content is protected !!