India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரமக்குடியில்
நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று 5 முனை சாலை அருகே கோடை வெயிலை சமாளிக்க பொது மக்களுக்காக இலவச நீர், மோர் பந்தல் அமைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
செங்கம் அடுத்துள்ள சாத்தனூர் அணை சுற்றுலா இடத்திற்கு வழக்கமாக கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் குழந்தைகள் வருவது வழக்கம். கோடை வெயிலின் உக்கிரம் உச்சத்தில் இருக்கும் நிலையில், சாத்தனூர் அணையில் மக்கள் நடமாட்டம் இன்றி பூங்காக்கள் களை இழந்து காணப்படுகிறது.
கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அணைகளில் உள்ள சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் உள்ள நீரளவு குறைந்த அளவில் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள போர்த்திமந்து அணையில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 20 கோடி லிட்டர் குடிநீரை பெற கோவை மாநகராட்சி தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அது கிடைக்கும் என்று இன்று மாநகராட்சி ஆணையர் கூறினார்.
ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. இதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து கட்டணமும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 9487247205, 0424-2294365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மே 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் பிரபல “கிருஷ் டான்ஸ் அகாடமி” மாணவர்கள் 02.04.2024 அன்று சென்னையில் நடைபெற உள்ள “நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறார்கள். இதில் சுமார் 5000 மாணவர்கள் ஒரே நேரத்தில் நடனம் ஆடி கின்னஸ் சாதனை முயற்சி செய்யப்போகிறார்கள். இதில் கிருஷ்ணகிரி சார்பில் 100 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இவர்களின் முயற்சி வெற்றிபெற அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.
வெள்ளகோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். மொடக்குறிச்சி, கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (37). இவரிடம் வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரில் ஹரிஹரனை வெள்ளகோவில் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா மே 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 10ஆம் தேதி நடைபெறுவதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அரசு துறைகள் மற்றும் அனைத்து விதமான கல்விநிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி எல்லைக்குள், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் எல்லையோரத்தில் உள்ளது ஏம்பல். அரிமளம் ஒன்றியத்துக்குள்பட்ட இப்பகுதியில் 1984 ல் அரசு வட்டார கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செங்கோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மே நினைவுச் சின்னத்தின் உருவப்படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து பழைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை தனது சொந்த செலவில் தயவு செய்து கொடுத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.