Tamilnadu

News May 1, 2024

ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் கேரளா எல்லையில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் பறவை காய்ச்சல் கண்காணிப்பு பணிக்கான அனைத்து துறை ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் இன்று நடைபெற்றது.

News May 1, 2024

குரு பகவானை வழிபாடு செய்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ

image

வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள குரு பகவான் கோவிலில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறும் குரு பகவானே வணங்க பல்வேறு அரசியல் கட்சிகள் வருகை புரிந்து குரு பகவானை வணங்கி சென்றனர். அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த உத்திரமேரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தனது தொண்டர்களுடன் குரு பகவானை வணங்கி வழிபாடு செய்தார்.

News May 1, 2024

உழைப்பாளர் சிலையாக மாறிய மாணவர்கள்

image

மே தினத்தையொட்டி தொழிலாளர்களின்  உழைப்பை போற்றும் வகையில்,  உழைப்பாளர் சிலை போல் திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே மாணவர்கள் நின்றனர். உழைப்பவர்களால் தான் இந்த தேசம் வலிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும் ஆனால் உழைப்பாளர் சிலைக்கு தனி சிறப்பு உள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்கள் நின்றனர்.

News May 1, 2024

தி.மலையில் அதிகபட்ச வெப்பநிலை 107.6 டிகிரி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில்
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 107. 6 டிகிரி பாரன்ஹீட், 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News May 1, 2024

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா

image

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் கூறுகையில், ”உடல் நிலை பாதிப்பு சூழல் கருதி ராஜினாமா செய்ய திட்டமிட்டு, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். வேறு காரணம் எதுவுமில்லை. உடல் நலம் பாதிப்பு காரணமாகவே விலகி கொள்ள முடிவெடுத்துள்ளேன். ஆளுநரின் தகவலுக்காக காத்திருக்கிறேன்” என்றார். இன்னும் அவருக்கு 11 மாதம் பணிக்காலம் இருப்பது, குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயற்சி

image

உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன்பு மகளின் வாழ்க்கையை காப்பாற்ற சொல்லி புகார் கொடுத்து உளுந்தூர்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் சற்று நேரத்திற்கு முன் 2 பேரக் குழந்தைகளுடன் உடம்பில் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்த நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

News May 1, 2024

ஏற்காடு பேருந்து விபத்து! அதிவேகம் தான் காரணம்

image

சேலம், ஏற்காட்டில் நேற்று பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், 5பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மலைப்பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைவாக செல்ல வேண்டும். ஆனால், ஓட்டுநர் ஜனார்த்தனன் 50 கி.மீ வேகத்தில் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர்.

News May 1, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் லெனின், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

தூத்துக்குடி: 37 பவுன் தங்க நகை திருட்டு

image

தூத்துக்குடி அய்யாசாமி காலனியைச் சேர்ந்தவர் ஜெபஸ்டி எஸ்தர் . (52 )இவர் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பி உள்ளார். அப்போது இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 37 பவுன் தங்க நகை திருடு போனது தெரிய வந்தது. எஸ்தர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 1, 2024

ஈரோட்டில்: 110.48 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்

image

ஈரோட்டில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி வெயில்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஈரோட்டில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!